- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 20 June 2012

மக்களை இரட்சிக்கும் வார்த்தை

1894 இல் ஆங்கிலக் கப்பலொன்றிலிருந்து ஒருவரது வேதாகமம் தவறிக் கடலில் விழுந்தது. அவ்வேதாகமத்தின் கதை அத்தோடு முடிந்து விட்டதாகவே கப்பலிலிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், அது ஜப்பானிய மீனவனுடைய வலையில் அகப்பட்டது.

ஜப்பானிய மீனவன் தன் வலையில் அகப்பட்ட வேதாகமத்தை துறைமுக அதிகாரிடம் கொடுத்தான். அவ்வுதாகமத்தைப் பார்வையிட்ட துறைமுக அதிகாரிக்கு அது சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. 



துறைமுக அதிகாரியும் அதன் பிரதி ஒன்றைத் தன்னிடம் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். சீன வேதாகமத்த வாசித்த அந்த அதிகாரி இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டதோடு, அதைத் தன் நண்பனுக்கும் சகோதரனுக்கும் காண்பித்தான். அவர்களும் சீன வேதாகமத்தை வாசித்து இரட்சிக்கப்பட்டனர். அநேகரை இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் கொண்டு வந்தனர்.

கிறிஸ்தவ வேதாகமானது கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே ஒருவனை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை கொண்டிருப்பதனால் (2 தீமோ. 3:15) வேதாகமத்தை வாசிப்பவர்கள் இயேசுகிறிஸ்துவண்டை வந்து இரட்சிக்கப்படுகின்றார்கள். எனவே, மக்கள் இரட்சிக்க்பபடுவதற்கு வேதாகம வார்த்தைகளையே நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். 

( சில சம்பவங்களில் சில சத்தியங்கள், )



தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment