- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 4 April 2012

இயேசுகிறிஸ்துவின் மரணம் (2)


முடிவுரை -



இயேசுகிறிஸ்து ஏன் மரித்தார் என்பதற்கு காலத்துக்கு காலம் பல பதில்கள் இறையியலாளர்களால் கொடுக்கப்பட்டுள்ளதை மேற்கண்ட 6 கருத்துக்களும் அறியத்தருகி்ன்றன. ஒவ்வொன்றிலும் ஓரளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. எனவே எந்த ஒரு கருத்தையும் நம்மால் முற்றாக நிராகரிக்க முடியாது. அதேசமயம் எல்லாவற்றையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எனவே வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு இவற்றை நாம் ஆராய்ந்து இயேசுகிறிஸ்து ஏன் மரித்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து சிலுவை மரணம் பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைத் தனித்தனியே மேற்கண்ட விளக்கங்கள் அறியத் தருகிறது. 

இயேசுகிறிஸ்து வியாதிகளுக்காக மரித்தாரா இல்லையா? என்பது இன்று பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது. சிலர் இயேசு மனிதனுடைய பாவத்துக்காக மட்டுமே மரித்தார்  என வாதிடுகையில், மற்றவர்கள் அவர் மனிதனுடைய வியாதிகளுக்காகவும் மரித்தார் என தர்கிக்கின்றனர். நாம் முதலில் இயேசுகிறிஸ்து வியாதிகளுக்காக மரிக்கவில்லை எனும் கருத்துடையவர்களின் தர்க்கங்களைப் பார்ப்போம். 

1) இயேசுகிறிஸ்து மனிதர்களுடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதே வேதத்தின் பொதுவான போதனையாகவுள்ளது.

2) இயேசுகிறிஸ்து நம் பாவங்களை சிலுவையில் சுமந்து பாவமில்லாத அவர் நமக்காக பாவமானாரே தவிர, அவர் மானிட வியாதிகளை எல்லாம் தன் மீது சுமந்து சிலுவையில அவர் வியாதியஸ்தராகவில்லை.

(3) இயேசுகிறிஸ்துவிடம் எத்தகைய பாவிகளும் வந்தால் உடனடியாக பாவமன்னிப்பைப் பெறுவது போல் அவரிடம் வரும் எல்லா வியாதியஸ்தர்களும் உடனடியாக சுகம் பெறாதமையால் அவர் வியாதியஸ்தர்களுக்காக மரிக்கவில்லை என்பதைக் காட்டும். 

(4) மத்தேயு ஏசாயா 53:4 ஐ இயேசுவின் சிலுவை மரணத்திற்கு அல்ல. சுகமாக்கும் ஊழியத்திற்கே உபயோகிக்கின்றார். (மத். 8:16-17) ஆனால் ஏசாயா 53:4 இயேசுகிறிஸ்து பாவங்களுக்கு பலியாவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் என்பதனால் மத்தேயுவின் உபயோகம் பிழையானது என்றும் அநேகர் கூறுகின்றனர். 

இயேசுகிறிஸ்து பாவத்திற்கு மரித்தார் என்பது உண்மையாயினும் அவருடைய சிலுவைப் பலியில் பாவத்தின் விளைவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. வியாதியும் பாவத்தின் விளைவுகளில் ஒன்று என்பதனால் அவருடைய சிலுவையில் மானிட வியாதிக்கான பரிகாரத்தையும் கொண்டுள்ளது. எனவே,  இயேசுகிறிஸ்து மானிட வியாதிகளுக்காக மரிக்கவில்லை என கூறுவோர் கருத்துக்களை வேதாகமத்தின் அடிப்படையில் ஆராய்வோம். 

இயேசுகிறிஸ்து மனிதருடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதே வேதத்தின் பொதுவான போதனையாயிருப்பினும் அவரது சிலுவைப் பலியில் வியாதிகளுக்கும் பரிகாரமுள்ளது. வியாதிக்கு மூலகாரணம் பாவமே. மனிதனுடைய வீழ்ச்சி அவனுடைய ஆவிக்குரிய நிலையை மட்டுமல்ல சரீரத்தையும் பாதித்தது. இதனால் அவனுடைய சரீரம் வியாதிப்படக்கூடிய நிலையை அடைந்தது. எனவே இயேசு பாவத்திற்கு விடுதலையைக் கொடுக்கும் ஒரு பலியாக, வியாதிகளுக்கான பரிகாரத்தையும் உள்ளடக்கியதொன்றாகவே உள்ளதெனலாம். 

மனித பாவத்திற்கும் வியாதிக்குமிடையே தொடர்பு இருப்பதை வேதம் தெளிவாக காட்டுகிறது. சில சமயங்களில் நேரடியாகவும் சில சமயங்களில் மறைமுகமாகவும் பாவமே வியாதியின் காரணமாக அமைகிறது. (1 கொரி. 11:17-30) உடன் கலா. 4 ஐயும் யோவான் 5 உடன் 9 ஐயும் ஒப்பிடவும்) நேரடியான தொடர்பு இருக்கும்போது பாவம் மன்னிக்கப்படாவிட்டால் வியாதி குணமடையாது. எனினும் எல்லா வியாதியுமே நாம் செய்யும் பாவத்தினால்தான் என கூற முடியாது. “நாம் பாவ சரீரத்தில் இருப்பதனாலேயே வியாதிகள் எமக்கு வருகிறது. (காசன்) பரலோக வாழ்வில் வியாதியோ துன்பமோ இருக்காது. (வெளி. 21:4, 22:3) 


இயேசுகிறிஸ்து பாவத்தை மட்டுமல்ல அதன் சாபங்கள் அனைத்தையுமே சிலுவையில் சுமந்தார். இற்றுள் வியாதியும் ஒன்று. . எனவே, சிலுவையில் நமக்காக பாவமானவர் வியாதியஸ்தராகமையினால் வியாதிகளுக்கான பரிகாரம் சிலுவைப்பலியில் இல்லை எனக் கூற முடியாது. “இங்கு நோய்களை சுமந்தார்“ என்பதில் சுமந்தார் என்பது நோய்வாய்ப்பட்டார் என்று மட்டுமல்ல நோய்களை நீக்கினார் என அர்ந்தந்தரும் மத்தேயுவின் அர்ததம் இரண்டாவதே. (பிரான்ஸ்) “இயேசுகிறிஸ்துவிடமிருந்து நாம் பெறும் நன்மைகளை அவருடைய சிலுவைப்பலிக்கு அப்பால் பெற முடியாது. தெய்வீக சுகம் இயேசுவின் சிலுவைப்பலியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமையினாலேயே இன்று அநேகருக்கு தெய்வீக சுகம் கிடைக்கிறது.“(காசன்)

இயேசுகிறிஸ்துவிடம் பாவமன்னிப்பைப் பெறவருகின்றவர்கள் அனைவரும் பாவமன்னிப்பைப் பெறுவதுபோல, எல்லா வியாதியஸ்தர்களும் குணமடையமலிருப்பது (2 கொரி. 12:7-9, தீமோ. 4:20 ஒப்பிடுக) இயேசுவின் சிலுவைப் பலியில் வியாதிகளுக்கான பரிகாரம் இல்லை என்பதற்கான ஆதாரமாகாது. ஏனென்றால் இயேசுவின் சிலுவைப்பலியில் மூலம் கிட்டும் எல்லா நன்மைகளையும் நாம் இப்போதே அனுபவிப்பதில்லை. உதாரணமாக “உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம் இயேசுவின் சிலுவைப்பலியின் மூலமே நமக்கு கிடைப்பதொன்றாயினும் அது இப்பொழுதே நமக்கு கிடைப்பதில்லை. அதுபோலவே வியாதிகளிலிருந்து கிட்டும் விடுதலையும் தற்போது இடைக்கிடையே நமக்கு கிடைத்தாலும் பரலோக வாழ்விலேயே முழுமையான விடுதலை கிடைக்கும் (காசன்)

ஏசாயா 53 ஆம் அதிகாரம் இயேசு மக்களுடைய பாவங்களுக்காக மரிப்பதைப் பற்றிய தீரக்கதரிசனம் என்பதை மறுப்பதிற்கில்லை. மத்தேயு உட்பட புதிய ஏற்பட்டு ஆசிரியர்கள் அனைவருமே இதை இயேசுவின் சிலுவை மரணத்திற்கான தீர்க்கதரிசனமாகவே உபயோகித்துள்ளனர். (மத். 28 : 28 , 27:57 ; அப். 8:32-33 1 பேதுரு 2 :24) ஆனால் மத்தேயு 8:16-17 இல் அவர் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை இயேசுவின் குணமாக்கும் ஊழியத்திற்கே உபயோகிக்கிறார். வியாதிக்கும் பாவத்திற்கும் இடையே தொடர்பிருப்பதை நாம் மறக்கலாகாது. “இயேசுவின் ஊழியத்தில் அவருடைய குணமாக்கும் செயல்கள் சிலுவை மரணத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டமையால், அது ஏசாயா 53 இன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் செயலாக உள்ளது(காசன்) இயேசுவின் குணமாக்கும் ஊழியம் சிலுவை மரணத்திற்கு முன்பானது என்றாலும் மத்தேயு சிலுவை மரணத்திற்கு பின்பே இதை எழுதியுள்ளார். மேலும், மரணத்திற்கு முன்பும் இயேசு பாவங்களை மன்னித்துள்ளார். இவை நடைபெறவிருக்கும் சிலுவைப் பலியை எதிர்பார்த்து செய்யப்பட்டவைகளாகும். எனவே மத்தேயு ஏசாயா 53 ஐ பிழையாக உபயோகித்தார் என கூற முடியாது. 

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் எனும் தீர்க்கதரிசனம் ஆவிக்குரிய சுகத்தைப் பற்றியதாயினும் இதில் சரீரப்பிரகமாரமான சுகமும் உள்ளடக்கப்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இயேசுகிறிஸ்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை மட்டும் மீடக்கவில்லை. நம்முடைய சரீரத்தையும் மீட்டுள்ளார். (ரோமர் 8:23 ; 1 கொரி. 6:20) “இரட்சிப்பு ஆவிக்கு மட்டுமல்ல. சரீரத்திற்கும் கிட்டும் ஒன்று. (மொரிஸ்) (மத். 9:21-22 உடன் லூக் 7:50 ஒப்பிடவும்) இயேசுவின் சிலுவைப் பலியின் மூலமாகவே ஆன்மீக இரட்சிப்பு கிடைப்பதாலும் இயேசு நம் சரீரத்தையும் மீட்டுள்ளமையினாலும், சரீரப்பிரகாரமான சுகமும் அவரது சிலுவைப்பலியில் உள்ளடக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. (மொரிஸ்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment