- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 22 March 2012

இதயங்களை மாற்றும் வேதம்


பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வார்தைகளைக் கொண்டதாயிருக்கும் என்றால் அது வாசிப்போரை மாற்றக் கூடியதாய் இருக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தின் ஜீவ வசன வார்த்தைகளினால் தங்கள் இருதயம் மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை எண்ணி முடியாதது. பரிசுத்த மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை எண்ணி முடியாதது. பரிசுத்த வேதாகமம் ஜீவனுள்ள வார்த்தை களைக் கொண்டிருப்பதனால் யார் வேண்டுமானாலும் திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் அதை வாசிக்கும்போது மாற்றப்படு வார்கள். 

இங்கிலாந்து தேசத்திலே பிராங் மாரிசன் என்ற ஒரு வழக்கறிஞர் இருந்தார் இவர் ஒரு நாத்தீகர். இவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சம்பவிக்கவில்லை என்ற ஒரு புத்தகம் எழுதி நிரூபித்தால் கிறிஸ்தவத்தி்ன் அஸ்பதிபாரங்கள் அசைக்கப்படும் என்று திட்டமிட்டார். புத்தகத்தை எழுதவும் உட்கார்ந்தார். புத்தகத்தை எழுதுவதற்காய் பரிசுத்த வேதாகமத்தை திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் வாசித்த அவர் விசுவாசியாக மாற்றப்பட்டார். 

இயேசுவின் உயிர்த்தெழுதல் சம்பவிக்கவில்லை என எழுத ஆரம்பித்த இவர் இயேசுகிறிஸ்து மெய்யாவே உயிர்த்தெழுந்தார்  இயேசு  கிறிஸ்து மெய்யாகவே உயிர்த்தெழுந்தார் என எழுதி முடித்தார். இவர் எழுதிய புத்தகத்தின் பெயர் Who moved the stone? அதாவது “கல்லைப் புரட்டியது யார்? என்பதாகும். இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் 'The Book that refused to be written'  “நான் எழுத மறுத்த புத்தகம்“ என தலைப்போடு ஆரம்பமாகின்றது. வேதத்தின் ஜீவ வார்த்தைகள் நாத்திகரான பிராங் மாரிசனை மாற்றி இயேசு கிறிஸ்து உயரித்தெழவில்லை என்று எழுத ஆரம்பித்த அவரை “இயேசு கிறிஸ்து மெய்யாகவே உயிர்த்தெழுந்தார்“ என்று எழுதும்படி செய்தது. 

பிராங் மாரிசனை மாற்றிய பரிசுத்த வேதாகமம் உங்களையும் மாற்ற வல்லது. வாசித்துப் பாருங்கள். பரிசுத்த வேதாகமத்தை திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் வாசியுங்கள். Oxford University இல் இரண்டு அறிஞர்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். Gilbert West, Lord Littleton என்ற இவர்களிருவரும் வழக்கறிஞர்கள். கிறிஸ்தவம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் மேலும், பவுல் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்ட பின்பு சபைகளை ஸ்தாபித்தான் என்ற கருத்தின் அடிப்படையிலும்தான் கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டும் சம்பவிக்கவில்லை என்று ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி நிரூபித்தால் அது கிறிஸ்தவத்திற்கு பேரிடியாகும் என்று இவர்களிருவரும் தீர்மானித்தனர். 

Gilbert West இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று எழுதுவதற்கான குறிப்புகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.  Lord Littleton  பவுல் கிறிஸ்தவராக மாறவில்லை என ஆராய்ந்து எழுத ஆரம்பித்தார். வேதத்தை வாசித்து தனித்தனியே ஆராய்ச்சி செய்து சில காலம் கழித்து இருவரும் தங்கள் தங்கள் ஆராய்ச்சி குறிப்புகளோடு ஒருவரையொருவர் சந்தித்தனர். Gilbert West ஆராய்ச்சி செய்து எழுதிக் கொண்டு “இயேசு கிறிஸ்து மெய்யாகவே உயிர்தெழுந்தார்“ என்று. Lord Littleton எழுதிக் கொண்டு வந்திருந்தார் “பவுல் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டு உண்மையாகவே சபைகளை ஸ்தாபித்தான்“ என்று. Gilbert West எழுதிய புத்தகத்தின் பெயர் Observation of the History and evidence of Resurrection of Jesus Christ' அதாவது இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த சரித்திரமும் அதற்கான ஆதாரங்களும் என்பதாகும். Lord Littleton  எழுதிய புத்தகத்தின் பெயர் Observation on the conversion and Apostleship of St. Paul அதாவது பவுலினுடைய மனமாற்றமும் அப்போஸ்தல ஊழியமும்“ என்பதாகும்.

திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் வேதத்தை வாசித்த Gilbert West உம் Lord Littleton  உம் மாற்றினார்கள். இவர்களை மாற்றிய பரிசுத்த வேதாகமம் உங்களையும் மாற்ற வல்லது. 

அநேகர் அறிந்த நாத்திகரான இங்கர்சால் ஒரு சமயம் இரயிலில் சென்ற கொண்டிருந்தபோது Lew Wallace என்ற வழக்கறிஞரை சந்தித்தார். இருவரும் கிறிஸ்தவத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிக்கொண்டு வந்தனர். அப்போது இங்கர்சால் Lew Wallace னிடம் இயேசு கிறிஸ்து தேவன் அல்ல. அவர் சாதாரண மனிதனே என்று நிரூபிக்கும் ஒரு புத்தகம் எழுதும்படி கேட்டுக் கொண்டார். அப்படியே அவரும் வேதத்தை வாசித்து ஆராய்ச்சி செய்து இயேசு தேவனல்ல என்று கிறிஸ்தவத்திற்கு எதிராக ஒரு புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். 

தனது புத்தத்தின் நான்கு அத்தியாயங்களை எழுதி முடித்த நிலையில் Lew Wallace பரிசுத்த வேததகமத்தின் வார்த்தைகளால் தொடப்பட்டார். புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தபோதே ஒருநாள் இயேசுவே தேவனுடைய குமாரன் என்று உணர்த்தப்பட்டார். தனது மேசையின் முன்பாக முழங்காற்படியிட்டார். தனது வாழ்க்கையில் முதன் முறையாக ஜெபித்தார். 50 வயதான அவர் தம் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்து கிறிஸ்தவராக மாறினார். தான் எழுதிய “இயேசு கிறிஸ்து தேவனல்ல அவர் சாதாரண மனிதனே“ என்று ஆரம்பத்தில் எழுதத் தீர்மானித்தவர் மாற்றப்பட்டவராய் இயேசு கிறிஸ்து தேவனே என்று எழுதி முடித்தார். 

அவர் எழுதி புத்தகம் இலட்சக்கணக்கான மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டும் திரைப்படமாய் ஓடியதுமான Benhur ஆகும். Lew Wallace மாற்றிய வேதாகமம் உங்களையும் மாற்ற வல்லது. திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் அதை வாசித்துப் பாருங்கள். 

(இவ்வாக்கமானது சகோ. தாயப்பன் எழுதிய அரிய வேதம் அறிய வேண்டிய வேதம் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்) 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment