- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 12 April 2012

எதிரியையும் நேசிக்கும் அன்பு

1883 ஆம் ஆண்டு இரட்சண்ய சேனையின் மிஷனரியாக இலங்கைக்கு வந்த வில்லியம் கிலாட்வின்  கொழும்பில் பல இடங்களில் திறந்தவெளிக் கூட்டங்களை நடத்தி வந்தார். இரட்சணிய சேனையின் ஆரம்ப காலக் கூட்டங்களுக்கு மக்கள் கல்லெறிவதன் மூலமே தமது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.

ஒரு தடவை, தன் மீது கல்லெறிந்தவன் யார் என்பதைக் கண்டு கொண்ட வில்லியம் கிலாட்வின், அவனது கரங்களைப் பற்றிப் பிடித்து “சகோதரனே இந்த கையினால் தானே நீ என் மீது கற்களை வீசினாய்?“ எனக் கூறி, அக்கரத்தை முத்திட்ட்டார். பிற்காலத்தில் அவன் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சண்யசேனை சபையின் அங்கத்தினனாகினான்.

எதிரிகளை நேசிப்பதே கிறிஸ்தவ அன்பின் தன்மையாகும். வில்லியம் கிலாட்வின் அத்தகைய அன்புள்ளம் கொண்டவராக இருந்தார். கிறிஸ்தவர்களாகிய நாமும், நமக்கு எதிராய் செயற்படுகிறவர்களையும் நேசிக்க கடமைப்பபட்டுள்ளோம்

இயேசு இதைப் பற்றி அறிவுறுத்தும் போது “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்;  என்றார்.

(நன்றி சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment