- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 28 December 2014

வேதமும் விளக்கமும் இயேசு கூற்று.. ஒவ்வொரு சுவிசேஷத்திலும் வித்தியாசமான முறையில் இருப்பது ஏன்?

73. இயேசுகிறிஸ்துவினுடைய கூற்றுக்களில் சில ஒவ்வொரு சுவிசேஷத்திலும் வித்தியாசமான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கான காரணம் யாது? (எம். சேகர். வவுனியா, இலங்கை)
 
 
 
 
இயேசுகிறிஸ்து ,இவ்வுலகில் வாழ்ந்தபோது, அக்காலத்தில் பாலஸ்தீனாவில் பேசப்பட்ட 'அரமிக்' மொழியிலேயே பேசினார். அவரது பிரசங்கங்கள் அரமிக் மொழியிலேயே செய்யப்பட்டன. ஆனால், புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. இதனால் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இயேசுவின் கூற்றுக்களை 'அரமிக்' மொழியிலிருந்து கிரேக்கத்திற்கு மொழிபெயர்த்து எழுதினர். குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தை பலர் மொழிபெயர்க்கும்போது, வாக்கிய அமைப்பு முறை வித்தியாசப்படும். இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்கள் 'அரமிக்' மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு எழுதப்பட்டமையினாலேயே அவை வித்தியாசமான வாக்கிய அமைப்புடன் எழுதப்பட்டுள்ளன. எனினும் ,இவ்வத்தியாசம் இயேசுகிறிஸ்துவினுடைய கூற்றுக்களின் அர்த்தத்தை மாற்றிவிடவில்லை. 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment