- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 17 December 2014

வேதமும் விளக்கமும் ஏசாயா தீர்க்கதரிசனப் புத்தகம் இருவரால் எழுதப்பட்டதா?

72. ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் 1 முதல் 39 வரையிலான அதிகாரங்கள் ஒருவரினாலும் 40 முதல் 60 வரையான அதிகாரங்கள் வேறு ஒருவரினாலும் எழுதப்பட்டதாகச் சிலர் சொல்கின்றனர். இது உண்மையா? (ராஜேஸ்வரி, கொழும்பு – 10)
 
நவீன வேத ஆராய்ச்சிகளுடைய இக்கருத்து இன்று பிரபல்யம் பெற்று வருகின்ற போதிலும், இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. இது ஆராய்ச்சியாளர்களின் ஊகமே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. 
 
 
 
1947 ஆம் ஆண்டு சாக்கடலுக்கருகே கண்டெடுக்கப்பட்ட கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கும்ரான் எனும் சமூகத்தவரது ஏசாயா புத்தகச் சுருளில் 38:8 முதல் 40:2 வரையிலான பகுதி ஒரே பக்கத்திலேயே உள்ளது. 39 ஆம் அதிகாரம் வரை ஒருவர் எழுதியது என்றால் அது ஒரு பக்கத்தில் முடிவடைய 40 ஆம் அதிகாரம் இன்னுமொரு பக்கத்தில் ஆரம்பமாயிருக்க வேண்டும். அத்தோடு, பழைய ஏற்பாட்டின் கிரேக்கமொழிபெயர்ப்பு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முழுவதும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவினால் எழுதப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நூல்களும் இக்கருத்தையே கொண்டுள்ளன. மேலும், புதிய ஏற்பாட்டாசிரியர்கள் ஏசாயாவின் புத்தகத்திலிருந்து எடுத்த 22 மேற்கோள்கள் ஏசாயாவின் பெயர் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்தின் இரு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட போதிலும் அனைத்தும் ஒரு ஏசாயாவினுடையதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இயேசுகிறிஸ்துவிடம் ஏசாயாவின் புத்தகச் சுருள் கொடுக்கப்பட்டபோது (லூக். 4:17-20) அவர் ஏசாயா 61:1-2 பகுதியை வாசித்தது, அப்பகுதியும் முதற் பகுதியை எழுதிய ஏசாயாவினுடையதே என்பதை உறுதிப்படுத்துகின்றது
 
ஏசாயா 61:1-2 
1. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

2. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், 
 
 லூக். 4:17-20
17. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:

18. கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,

20. வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment