- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 30 October 2014

வேதமும் விளக்கமும் - அப்.1:6இன் படி அக்காலத்தில் இஸ்ரவேல் நாடு இஸ்ரவேலுக்கு சொந்தமில்லையா?

64. அப்போஸ்தலர் 1:6 இல் ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று சீடர்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்கின்றனர். அக்காலத்தில் இஸ்ரவேல் நாடு இஸ்ரவேலுக்கு சொந்தமில்லையா? (எச்.டி. ராணி, வேதப்பட்டி, இந்தியா)  
அக்காலத்தில் பாலஸ்தீனா ரோம ராஜ்யத்தின் ஆளுகையின் கீழ் இருந்தது. இயேசுகிறிஸ்து பிறந்தபோது ஏரோது ராஜாவும் அதன்பின்பு அவனது பிள்ளைகளும் ரோமர்களுக்காகவே பாலஸ்தீனாவை ஆண்டனர். ரோம அரசின் ஆளுனராகவே பிலாத்து பணியாற்றினான். தேவனால் அனுப்பப்படும் மேசியா தம்மை ரோமர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் எனும் நம்பிக்கை அக்காலத்து யூதர்கள் மத்தியில் இருந்தது. இதனால்தான் இயேசுகிறிஸ்து பரமேறிச் செல்வதற்கு முன்பு சீடர்கள் இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திருப்பிக் கொடுப்பீர் எனக் கேட்டனர். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment