- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 23 January 2014

வேதமும் விளக்கமும்-மத்.10:5 இல் இயேசுகிறிஸ்து தன் சீடர்களை சமாரியர் பட்டணங்களுக்குப் போகவேண்டாம் என ஏன் கூறினார்?



மத்தேயு 10ஆம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து தனது 12 அப்போஸ்தலர்களையும் முதல் தடவையாக ஊழியத்திற்கு அனுப்பும் சம்பவமே குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சமயம் அவர் அவர்களிடத்தில்  நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என கூறினார். இயேசுகிறிஸ்து தனது ஊழியத்தின் இறுதியில் சீடர்களை உலகெங்கும்போய் சுவிஷேசத்தை அறிவிக்கச் சொன்னாலும் (மத். 28:19) முதலில் இஸ்ரவேல் மக்களிடமே அவர்களை அனுப்பினார். 


மத்தேயு 10:5

5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

மத்தேயு. 28:19
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மேலதிக விபரங்களுக்கு

நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், ….. ,காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.(மத்தேயு 10:5-6)



தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment