- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 9 September 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 3- முன் பின் கவனிக்க(2)

4. முன்பின்னுள்ள வாக்கியங்களைக் கவனிக்காமல் விளக்கவுரை அளிப்பதால் ஏற்படும் தவறுக்கு எடுத்துக்காட்டுகள். 

(அ) “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். (யோசுவா 24:15) 
பலர் இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இயேசுவையே தெரிந்து கொள்ள மக்களை அழைக்கின்றனர். ஆனால் யோசுவாவின் கருத்து வேறு. கர்த்தரைச் சேவிக்க உங்களுக்கு மனமில்லை போலும். அப்படியானால் யாரைச் சேவிப்பீர்கள்? பாட்டன் பூட்டன்மார் வழிபட்ட சிலைகளையோ? அல்லது கானான் நாட்டுக் குடிகள் வழிபட்ட சிலைகளையோ? என்று யோசுவா பரியாசமாகப் பேசுகிறார். நீங்கள் எல்லாம் வல்ல இறைவனாகிய கடவுளைச் சேவிக்க மறுத்தால் வெறும் சிலைகள்தான் உங்கள் தெய்வமாகும். இந்தச் சிலையோ, அந்தச் சிலையோ இப்படிச் சிலைகளைத் தான் நீங்கள் தெரிந்துகோள்ள வேண்டும். அப்போது உங்கள் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கும். கர்த்தரைச் சேவிக்க உங்களால் முடியாது. இவைகள்தான் இக்கேள்வியின் மெய்ப்பொருளாகும். 

(ஆ) “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றான். அப்பொழுது அவர் நீ போய் இந்த ஜனங்களை நோக்கி….. சொல்” ஏசா. 6:8,9
இந்த வசனத்தின் மூலம் எத்தனை ஏராளமான நற்செய்தி ஊழிய அறைகூவல்கள்!! எத்தனையோ நற்செய்திப் பணியாளர்கள் இவ்வசனத்தால் அழைப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் 9ம் வசனத்திலிருக்கும் “நோக்கி” என்ற சொல்லுக்கு “சொல்” என்ற சொல்லுக்கும் பொருளைக் கவனிக்காமல் விட்டுவிலகுவது நியாயமா? ஏசாயா கூறவேண்டியது நற்செய்தியா? துர்செய்தியா? ஆசீர்வாதமா? சாபமா? (மத். 13:10-17ஐயும் அப். 28:25-28 ஐயும் பார்க்க)
பரம்பரையாக நாம் கேட்டுவரும் கருத்துக்கள் முழுவதும் தவறு என்பது என் கருத்தன்று. ஆனால் செய்தி அளிக்கும் பணியாளர்கள் எல்லோரும் தாங்கள் விளங்கஞ் செய்யும் வேத வசனத்தைத் திரித்துக் கூறாமல், தீர  சிந்தித்து. முன்பின்னுள்ள தொடர் வாக்கியங்களையும் கவனித்து, சரியான முறையில் தங்கள் செய்திகளை ஆயத்தஞ் செய்தல் வேண்டும் என்பதே என் கருத்து. நமது சொந்தக் கருத்துக்களைக் கூறாமல் தேவாதி தேவனுடைய அருட் செய்தியை நேர்மையாய் விளக்கஞ் செய்வதன்றோ நமது பணி.



5. பிறை அடைப்பு குறியினுள் போடப்பட்டிருக்கும் செய்திகள். 
       (Parenthetical passages that could be put within brackets)

(அ) சில சுருக்கமான வேறொன்று விரிக்கிற (Digression) வாக்கியங்கள். 
I. யோசுவா 6:1 எரிகோ பட்டணத்தின் நிலைமையை எடுத்துக் காட்ட சேர்க்கப்பட்ட ஒரு வசனம் “யோசுவா அப்படியே செய்தான்” (வச. 5:15) “கர்த்தர் யோசுவாவை நோக்கி ; இதோ” ….(6:2) என்று தொடர்ச்சியாக வாசிக்கலாம்.

II. தானியேல் 2:4 “அப்பொழுது கல்தேயர் (அரமேய அல்லது சீரிய மொழியில்) ராஜாவிடம் ….” இந்த வசனத்திலிருந்து 7:8 வரை தானியேல் எபிரேய மொழியில் எழுதாமல் அரமேய மொழியில் எழுதியிருக்கின்றார் என்பதைக் குறிப்பதற்காக இந்த மூன்று வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. தானியேல் 8:1 முதல் ஆகமம் முடியும்வரை மீண்டும் எபிரேய மொழியில் எழுதியிருக்கின்றார். 

III. யோவான் முதலாம் அதிகாரத்தில் மூன்று சுருக்கமான விளக்கவுரைகள் உண்டு. மூன்றும் பிறை அடைப்புக்குறிகளுள் போடப்பட வேண்டியவை. 1:38 “ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாகும்”. 1:41,42ஐயும் பார்க்க. 


(ஆ) சில நீண்ட வேறொன்று விரிக்கின்ற பகுதிகள் :
சில ஆசிரியர்கள் (சிறப்பாக பவுல் அடியார்) தாங்கள் சொல்லிக் கொண்டு வருகின்ற பொருளை இடையில் விட்டுவிட்டு வேறு பொருள்பற்றி எழுதிய பின் முன்பு விடப்பட்ட பொருளைப் பற்றி தொடர்ந்து எழுதுவர். குறிப்பாக.. 
I. 2 கொரி 2:13 இல் தீத்துவைக் காணவேண்டுமென்று விரும்பித் துரோவாவை விட்டு மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப் போனார் பவுல். தீத்துவைக் கண்டதனால் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் நான்கு அதிகாரங்களையும் ஒன்பது வசனங்களையும் மிக எழுப்புதலாக எழுதிய (பவுல் ஒரு எழுத்தாளர் மூலம் தம் நிருபங்களை எழுதினார்) பின் 7:6 ஆம் வசனத்தில் தாம் மறந்துபோன தீத்துவை மறுபடியும் நினைத்து தாம் விட்டுவிட்ட வரலாற்றை மீண்டும் தொடர்ந்து குறிப்பிடுகின்றார். ஆகவே 2:14 முதல் 7:4 வரையுள்ள இந்த நீண்ட பகுதி பிறை அடைப்புக்குறிக்குள் போடப்பட வேண்டியது என்று சொல்லலாம். அதற்காக இடைப்பறவரல் முக்கியமானவையல்ல என்பது பொருளன்று

II. எபேசியர் 3:1 இதனிமித்தம்
                             (3:2 - 3:13)
எபேசியர் 3:14 இதனிமித்தம்
                               அல்லது
எபேசியர் 3:1 கைதான பவுலாகிய நான்
                                 (3:2 - 3:21)
எபேசியர் ஆண்டவருக்குள் கைதியான நான்


III. ரோமர் 5:12 முற்றுப்பெறாத வாக்கியம் “இப்படியாக ….பாவமும் …மரணமும்  பிரவேசித்தது போலவும்” எல்லா மனிதரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் –இதுவுமாயிற்று (ப.தி, பு.தி) என்ற சொல் மூலத்தில் இல்லை. பவுல் சில மறைபொருட்களை விளக்க ஐந்து வசனங்களை 5:13-17 வேறொன்று விரிக்கின்ற பகுதியை எழுதியபின் 2ஆம் வசனத்தில் முடிக்காத காரியத்தை மீண்டும் 18இல் எழுத அதை நல்ல முறையில் முடித்து விடுகின்றார். ரோமன் கத்தோலிக்க திருப்புதல் “ஒரே மனிதனால் பாவமும், பாவத்தால் சாவும் இந்த உலகத்தில் நுழைந்தது போலவும், இவ்வாறு எல்லோரும் பாவஞ்செய்தமையால் எல்லா மனிதருக்குள்ளும் சாவு பரவியது போலவும்.... ஏனெனில்” என்று கூறுவது சரியே..



6. சில இடங்களில் இருவர் அல்லது மூவர் ஒருவரோடொருவர் உரையாடுகின்ற உரையாடல் நடை நமக்கு இடர்பாட்டைத் தரலாம்
(அ) ஆபகூக் என்ற ஆகமத்தில் தீர்க்கதரிசியும் தேவனும் ஒருவரோடொவர் உரையாடுகின்றனர். 
தீர்க்கதரிசி                                      தேவன்
ஆப. 1:1-4 நீர் கேளாமலிருக்கிறீரே                         1:5-11
ஆப. 1:12-2:1 நீர் மௌனமாயிருக்கின்றதென்ன                 2:2-4

(ஆ) ரோமர் நிருபத்தில் வாக்குவாதத்தில் திறமையுள்ள வேதபாரகன் ஒருவனுக்கு நிருபாசிரியருக்கும் விவாதம் நடப்பது ஆங்காங்கு காணப்படுகின்றது. தடை செய்கின்றவர் கீழ்காணும் கேள்விகளைக் கேட்கின்றர்

ரோமர் 3:1 : அப்படியானால் மற்றவர்களை விட யூதனுக்கு கிடைத்த நன்மை 
                       என்ன? விருத்தசேதனத்தால் பயன் என்ன?
பதில்         :  சுருக்கமாக 3:2 இலும் சற்று விரிவாக 9:4,5 இலும் கூறப்பட்டுள்ளது. 

ரோமர் 3:3 : அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை 
                         அவமாக்குமா?
பதில்            : 4ஆம் வசனத்தில் காணப்படுகின்றது. 

ரோமர் 3:5 :   தேவன் அநீதராயிருக்கின்றார் என்று சொல்லலாமா?
பதில்         :    ஒருகாலுமில்லை. (3:6)

ரோமர் 3:8 :     நன்மை வரும்படி தீமை செய்யலாமா?
பதில்         :     மேற்சொல்லிய நான்கு வினாக்களுக்குள் முதல் மூன்று 
                          கேள்விகளுக்கு விரிவான விடை 9ஆம் அதிகாரத்தில் 
                           அளிக்கப்பட்டுள்ளது. 

ரோமர் 6:1  : அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெறும்படி பாவத்தில் 
                        நிலைத்திருப்போம் என்போமா? 
பதில்             :  கூடாதே

ரோமர் 7:7 : அப்படியானால் நான் என்ன சொல்வது நீச் சட்டமும் பாவமும் 
                       ஒன்றுதானா? 
பதில்          :  ஒருகாலும் இல்லை

ரோமர் 9:6 : தேவ வசனம் அவமாய்ப் போயிறா?
பதில்             அப்படிச் சொல்லக் கூடாது

ரோமர் 9:14 :  கடவுளிடம் அநீதி உண்டா?
பதில்             :  ஒருகாலுமில்லை. 


7. இன்னும் ஒரு இடங்களில் நிருபாசிரியர் தன்னிடம் ஏற்கனவே வந்துள்ள கடிதத்தின் சில வார்த்தைகளையும் தன்னுடைய விரோதிகள் தன்னைப் பற்றித் தீதாய் சொல்லிய சில வசைமொழிகளையும் மேற்கோளாக்க் கூறுகின்றார்.
(அ) 1 கொரி. 6:12, 10:23 ப.தி “எல்லாற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு”. R.C.V- “எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு”. 1 கொரி 6:13 “உணவு வயிற்றுக்கென்றே உள்ளது. வயிறு உணவுக்கென்றே உள்ளது” என்கிறீர்கள். (R.C.V)
இது கொரிந்தியர் பயன்படுத்திய ஒரு பழமொழி உடலைச் சார்ந்தது. ஒழுக்கச் சார்பற்றது என்று பொருள்படும். ஆகவே விபச்சாரமும் வேசித்தனமும் கூட குற்றமன்று என்பர். உடல் தேவையை நிறைவு செய்யும் ஒரு வாய்ப்பு  என்று கூறுவர். கொரிந்தியரின் தவறான கருத்துக்குப் பலமான மறுப்பு கூறுகின்றார் பவுல்

(ஆ) 1 கொரி. 8:1 “நம் எல்லோருக்கும் அறிவண்டு என்கிறீர்கள். (R.C.V)

(இ) 2 கொரி. 10:1 ப.தி. “தூரத்திலிருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாய் இருக்கிறேன். என்றா சொல்கிறீர்கள்
R.C.V – உங்களோடு இல்லாதபோது கண்டிப்பாய் இருக்கிறேன் என்றா சொல்கிறீர்கள். 
R.C.V – பவுலினுடைய கடிதங்கள் கடுமையானவை. அழுத்தம் மிக்கவை. ஆனால் அவரை நேரில் பார்த்த சிலர் “தோற்றமுமில்ல பேச்சுத் திறனுமில்லை.” என்று கூறியதாக உள்ளது. 

(ஈ) 2 கொரி. 12:16 “தந்திரத்தால் உங்களைப் பிடித்தேனாம். “இது சரியாக காணப்படுகின்றது. இது போலவே அநேக வசனங்களை மிகவும் தெளிவான முறையில் தூத்துக்குடி R.C. கழகத்தினர் மொழிபெயர்ப்பு செய்துள்ளது மிகவும் பாரட்டத்தக்கது. 


இரண்டாம் விதி நமக்கு கற்றுத் தருவது
முன்பின்னுள்ள வசனங்களைக் கவனித்தே வசனத்தை விளக்க வேண்டும். 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment