- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 7 July 2012

கிறிஸ்தவர்களும் திருட்டு சீடிக்களும்

ஒருவர் ஒரு பொருளைத் தயாரிக்கும்போது எந்தளவு பிரயாசத்தை செலுத்தியும் பணத்தை முடக்கியும் அதைத் தயாரிக்கிறார்கள் என நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? எனினும் அவை வெளிவரும்போது அதை திருடுவதற்கென ஒரு கூட்டம் இருப்பதை அறிவீர்களா?

பிறர்படும் கஷ்டத்தப் பிரயாசத்தை திருடி பிரதி (Copy) பண்ணி வி்ற்பனை செய்வது திருட்டாகும். தாம் பிரயாசப்படாமல் கஷ்டப்படாமல் இதில் ஈடுபடுவது சோம்பேறித்தனமான ஒரு பாவமாகும். இதனால் உரியவர்களுக்கு சேரவேண்டிய நன்மை, புகழ் என்பன பிறரினால் களவாடப்படுகின்றன. தயாரிப்பவரின் பணம் வீண் விரயமாகின்றது இதை குறுக்குவழியில் சம்பாதிப்பவர்கள் புரிந்து கொள்வதேயில்லை. உதாரணமாக ஒரு உடல்பலவீனமுள்ள ஒருவர் தனது குறைபாடுகளின் மத்தியிலும் பொருட்களை உற்பத்தி செய்கிறார் என்றால் அதனால் அவருக்கு சேரவேண்டிய ஆசீர்வாதம், இலாபம், செல்வம் அனைத்தும் பிறரால் சுரண்டப்படும்போது அவரது நிலை என்னவாகும்? அவருடைய உற்பத்தியை திருட்டுத்தனமாக சந்தைப்படுத்துபவர்கள் வீட்டிலே சாபம்தானே குடியிருக்கும்.

உண்மையில் திருட்டு சீடிக்களை தயாரிப்பது ஒரு பெரிய குற்றம். அதை வாங்குவதன் ஊடாக அத்திருட்டுக்கு உடந்தையாவது ஒரு சாபம். தாமறியாமலேயே இன்று அநேக கிறிஸ்தவர்கள் சாபத்தை வருவித்துக் கொள்கின்றனர். வேதாகமத்தில் “களவு செய்யாதிருப்பாயாக (யாத். 20:5) என்ற கட்டரைளயைக் காண்கிறோம். பிறருக்கு சொந்தமான பணம், புகழ் மற்றும் அவர்களுக்கு சேரவேண்டிய நன்மைகளை களவாய் எடுத்துக் கொள்ளக் கூடாது என இக்கற்பனை கூறுகிறது. நாம் பிறருக்குரியதை இச்சிப்பது ஒரு பாவமேயாகும்.

இன்று ஒரு சில விசுவாசிகளும். ஊழியர்களும் திருட்டு சீடிக்களை வாங்கிச் செல்வதினால் இதை கிறிஸ்தவ மக்களிடையே ஒழிக்க முடியவில்லை என சில வற்பனை உற்பத்தி செய்யும் நபர்கள் கவலைப்படுகின்றனர். திருட்டு எவ்விதத்தில் இருந்தாலும் அதனை நாம் எவ்வகையில் நியாயப்படுத்தி விட முடியாது. திருட்டு சீடிக்களை விற்பவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ரோமர் 12:7 கூறுகிறது. “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.“ “கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்“ (2 கொரி 8:21) ஆகவே அனைத்து கிறிஸ்தவர்களும் விசுவாசிகளும் சிந்தித்து இத்தகைய திருட்டுக்கு உடந்தையாகாமல் இருக்க முற்பட வேண்டும். ஏனென்றால் திருட்டு செயல்களுக்கு தண்டனை உண்டு. சிலது தேவனால் காலதாமதமாக தண்டிக்கப்படும். இன்று பணநோட்டுக்களை அச்சடித்து விற்பனை செய்வதனால் அது சட்ட விரோதம் என கூறும் அரசாங்கம் அவர்களைக் கைது செய்து தண்டனை கொடுக்கும். அதேபோலதான் இத் திருட்டுக்கு தேவனால் கொடுக்கப்படும் தண்டனை ஒரு சாபமாகத் தானே இருக்கும்? துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது (நீதி. 3:33)

திருட்டு பொருட்களை வாங்குபவர்கள் இருக்கும்வரை திருடர்கள் பெருகத்தான் செய்வார்கள். எனவே, ஒருபோதும் போலிக்கு இடமளிக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கும் போலி பொருட்களுக்கும் சம்பந்தம் வேண்டாம். ஆசீர்வாதமான வாழ்க்கை வேண்டுமானால், ஆசீர்வதமான முறைமைகளைப் பின்பற்றுங்கள். ஆசீர்வாத முறைமையைப் பின்பற்றுவதானது ஆசீர்வாதத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும். சரி, அன்பார்ந்த கிறிஸ்தவ நண்பர்களே இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

சார்ல்ஸ் ஸ்டீபன் அசரியா

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment