- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 30 March 2011

கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் (1 கொரிந்தியர் 15:28)


நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

இயேசுக்கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானவர் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி காண்பிக்கும் வசனமாக யெகோவாவின் சாட்சிகளால் சுட்டிக்காட்டப்படுவது 1 கொரிந்தியர் 15:28 ஆகும். சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.


என்று வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுக்கிறிஸ்து சர்வல்லமையுள்ள தேவனாக இருந்தால் இவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க மாட்டார் என்று கூறும் யெகோவாவின் சாட்சிகள், அவர் யெகோவா தேவனுக்கு முழுமையாக் கீழ்பட்டவராக இருப்பதாகத் தர்க்கிக்கின்றனர். (60) எனினும் இவ்வசனமும் நாம் இதற்கு முன்னர் ஆராய்ந்த “கிறிஸ்துவுக்கு தேவன் தலைவராயிருக்கிறார்“ எனு வசனத்தைப் போலவே இயேசுக்கிறிஸ்துவினுடைய செயலை அடிப்படையாக் கொண்ட தாழ்வான நிலையாக உள்ளதே தவிர, அவரது தேவத்தன்மையின் தாழ்வைப் பற்றிய விபரணம் அல்ல. மனிதரை மீட்பதற்காகத் தம்மையே தாழ்த்தி செயற்பட்ட இயேசுக்கிறிஸ்து தேவனுடைய திட்டத்திற்குத் தம்மைக் கீழ்படுத்தினார். “இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் எவ்வாறு தம்மைப் பிதாவுக்குக் கீழ்படுத்தி செயற்பட்டாரோ அதவிதமாக உலகின் முடிவிலும் தேவனுக்குக் கீழ்பட்டு செயல்படுவார் என்பதையே இவ்வசனம் அறியத் தருகிறது. (61). உண்மையில் மகிமையடைந்த நிலையிலும் இயேசுக்கிறிஸ்து தம்மைத் தாழ்த்திச் செயற்படுபவராய் இருக்கின்றார்(62)


இயேசுக்கிறிஸ்து தாழ்வானவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் வசனங்கள் அனைத்தும், மனிதரை மீட்கும் அவரது செயல்களோடு சம்பந்தப்பட்டதாய் இருப்பதை நாம் அவதானிக்கலாம். மானிட மீட்பைப் பற்றிய தேவ திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயேசுக்கிறிஸ்து. மனிதரை மீட்டு இரட்சிப்பதற்காகத் தம்மைத் தாழ்த்தி செயல்பட்டார். எனினும் அவர் தம்மைத் தாழ்த்திச் செயற்பட்ட சந்தர்ப்பங்களிலும் முழுமையான தேவத்தன்மை உடையவராகவே இருந்தார். பிலிப்பியர் 2:6-7 இயேசுக்கிறிஸ்துவின் தற்காலிகமான தாழ்த்தப்பட்ட மானிட நிலையை அறியத் தருகையில், கொலோசேயர் 2:9 அவர் எப்போதும் முழுமையான தேவத்தன்மையை உடையராகவே இருந்தார் எனபதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே அவர் தம்மைத் தாழ்த்தியபோது கூறிய விடயங்களையும். அத்தாழ்மையின் நிலையைக் குறிக்கும் வசனங்களையும் ஆதாரமாக் கொண்டு, அவர் பிதாவாகிய தேவனைவிடத் தாழ்வானவர் என்றோ, தேவத் தன்மையற்றவர் என்றோ கருவது தவறாகும்.


References
(59) Anonymous, Reasoning with the Scriptures p 410
(60)  Anonymous, Let God be True p 104
(61) L. Morris, 1 Corinthians : Tyndale New Testament Commentaries, p 213
(62) C.Blomberg, 1 Corinthians: The NIV Application Commentary, p 298
(63) G.D. Fee, The First Epistle to the Corinthians : New International Commentary on the New Testament p 760. 


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment