- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 14 September 2014

வேதமும் விளக்கமும்-நம்மால் சரியாக அறிய முடியாத தேவநீதியையும் தேவராஜ்யத்தையும் எப்படித் தேடுவது?

60. மத்தேயு 6:33 இற்கான விளக்கம் தேவை. நம்மால் சரியாக அறிந்துக் கொள்ள முடியாத தேவநீதியையும் தேவராஜ்யத்தையும் எப்படித் தேடுவது? (செல்வி, சிவன்குடியேற்று, இந்தியா) 
யூத மக்கள் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் நீதிமான்களாக வாழலாம் என எண்ணினர். எனினும் தேவனுக்கு முன்பாக நீதிமானாக நிற்பதற்கு இத்தகைய மனித நீதி போதுமானதாக இருக்கவில்லை. இதனால், தேவனுடைய நீதி மனிதனுக்கு அவசியப்பட்டது. இத்தேவநீதியானது இயேசுகிறிஸ்துவினால் மனிதனுக்குக் கொடுக்கப்படும் நீதியாகும். ஒரு மனிதன் இயேசுகிறிஸ்துவிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டு அவரைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொள்கையில், இயேசுகிறிஸ்து அவனுடைய பாவங்களை அவனிலிருந்து எடுத்துப் போட்டு, அவனுக்கு தன்னுடைய நீதியைக் கொடுக்கின்றார். இதுவே தேவநீதி. கிரியைகளின் மூலம் நீதியைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்காமல் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவன் இலவசமாய் அருளும் நீதியைத் தேடும்படியே மத்தேயு 6:33இல் அறிவுறுத்தப்பட்டுள்ளோம்.தேவனுடைய ராஜ்யம் என்பது தேவனுடைய ஆளுகையாகும். ராஜ்யம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “பசீலியா“ எனும் பதம் அரசாட்சி, ஆளுகை, ராஜரீகம் எனும் அர்த்தங்களைக் கொண்ட பதமாகும். இது அரசாட்சி செய்யும் இடத்தையல்ல வெறும் ஆட்சியையே குறிக்கின்றது. இது குறிப்பிட்ட ஒரு இடத்தின் ராஜ்சியத்தை அல்ல மாறாக எவ்விடத்திலுமுள்ள தேவனுடைய ஆளுகையை வர்ணிக்கும் பதமாக உள்ளது. ஒருவன் தேவனுடைய ஆளுகையின் கீழ் இருக்கும்போது அவன் தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கின்றான். எனவே தேவனுடைய ராஜ்யத்தை தேடுவதென்பது அவருடைய ஆளுகையின் கீழானவாழ்வை நாடுவதாகும். அதாவது ராஜாவாகிய அவரது சித்தம் யாதென்பதை அறிந்து அதன்படி வாழ்வதாகும். 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment