- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 18 July 2013

என் மேல் விழுந்த கடமை


சீஷத்துவத்தில் மற்றவர்களை வழிநடத்துவதில் பெயரெடுத்த “நேவிகேட்ஸ்” என்னும் ஊழிய ஸ்தாபனத்தை ஆரம்பித்த டோசன் ட்ரோட்மன் என்பவரும், அவரது சிறிய குழுவும் வேதவசனத்தை மனனம் செய்யவும் ஜெபிக்கவும் சாட்சி சொல்லவும் உறுதியான அர்ப்பணத்துடன் இருந்தனர். அவர்களின் சாட்சியைக் குறித்த அர்ப்பணம் என்னவென்றால், “ஒருநாளைக்கு ஒரு ஆத்துமாவைத் தேவனுக்காகக் தொடு” என்பதே. இது அவர்களது உறுதியான தீர்மானமாக இருந்தது. ஒருநாளைக்கு ஒருவருக்காகவது இயேசுகிறிஸ்துவைப் பற்றி கூற வேண்டும் அவர்கள் அப்படியே செய்தனர். 

ஒருநாள் இரவு டோசன் நித்திரை செய்வதற்காக கட்டிலில் ஏறியபோது அன்றைய தினம் தான் ஒருவருக்காகவாவது இயேசுவைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை உணர்ந்தார். நாளை இவருக்குச் சொன்னால் என்ன என்று முதலில் யோசித்தார். ஆனால்,அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. எழுந்து தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு பல மைல் தூரம் சென்றார். அப்பொழுது அவர் ஒருவரைக் கண்டார். அந்த நபர் தான் செல்லவேண்டிய ரயிலைத் தவற விட்டவர். அவருக்குத் தனது வாகனத்தில் இடம்கொடுத்தார் டோசன். தன்னை அறிமுகப்படுத்திய பின்பு பின்வருமாறு கூறினார். “நான் சொன்னாலும் நீங்கள் நம்பாமல் கூட இருக்கலாம். நான் இங்கு வருவதற்காக படுக்கையிலிருந்து எழுந்து வந்தேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதமான காரியத்தை நான் ஒவ்வொருநாளும் யாரிடமாவது பகிர்ந்து கொள்வேன். நான் ஒருது கிறிஸ்தவன்” என்று சொல்லத் தொடங்கினார். அந்த நபரும் தேவனைத் தேடிக் கொண்டிருந்த ஒருவராக இருந்தார். சுவிஷேசத்தைக் கேட்டு இரட்சிப்படைந்தார். 

ஒருநாளைக்கு ஒருவருக்காவது சுவிஷேசத்தை அறிவிப்பது என்ற டோசனின் தீர்மானம் ஏதோ ஒரு சட்டத்துக்குக் கீழ்படியும் ஒரு காரியம்போல எமக்குத் தோன்றலாம். ஆனால், அன்றிரவு அப்படிப் போகாமல் அடுத்தநாள் போயிருந்தால் தேவனைத் தேடிக்கொண்டிருந்த அந்த மனிதரைத் சந்தித்திருக்க முடியாது. டோசனின் வாழ்வு மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டுவரும் வாழ்வாக இருந்தது. அவருடைய மரணம்கூட, தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவனைக் காப்பாற்றுவதற்காக முயற்சித்தபோதே நேர்ந்தது.  

இந்த டோசன் மரித்தாலும் பல டோசன்கள் எழும்ப வேண்டும் என்றே ஆண்டவர் விரும்புகின்றார். சுவிஷேசம் அறிவிப்பது நம் கடமை. அந்த அன்பின் செய்திதானே நமக்கு ஜீவனைத் தந்தது. அதை நாம் பிறருக்குக் கொடுக்கலாம் அல்லவா? 

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! (1 கொரிந்தியர் 9:16) 




தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment