- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 12 October 2012

நீங்களும் இப்படிதானா?



நாங்கள் கிறிஸ்தவர்கள்
ஜாதி சான்றிதழ்களிலும்
ஜனத்தொகை கணக்கெடுப்பிலும்
நாங்கள் கிறிஸ்தவர்கள்

உலகத்தின் ஓலத்தில்
உதவ மறுத்து
நிதம் உல்லாதசத்தில்
உழல்கின்ற கிறிஸ்தவர்கள்

பணமும் பதவியுமே
எங்கள் பயண வழியின்
பாத சாம்ராஜ்யங்கள் ஆனதால்
நித்தியத்தை மறந்து
சத்தியத்தை மறுதலித்த
சாட்சியற்ற கிறிஸ்தவர்கள்

உலகில் எங்கள் வாழ்வு
விகற்பமாகிப் போனதால்
வாய்மை வழியைச் சொல்ல
வாழ்நாள்ளெல்லாம் வாயடைத்துப் போன
வெற்றுக் கிறிஸ்தவர்கள்

ஆனால்...
இன்று
எங்கள் கல்லறைத் தோட்டங்களில்
பகட்டான
கற்சிலுவைகள் மட்டும்
பாலுலகிற்காய் பரன்
பாரஞ் சுமந்து விட்டார் என்று
பாறை சாற்றிக் கொண்டிருக்கின்றன

நண்பா!
இப்படித்தான் நீயும்
வாழ்கின்றாயா?

நன்றி - மகிமையின் செங்கோல் 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment