- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Showing posts with label கிறிஸ்மஸ். Show all posts
Showing posts with label கிறிஸ்மஸ். Show all posts

Saturday, 24 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா? (4)(இறுதிப் பகுதி)

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க பகுதி 1, பகுதி 2  பகுதி 3 அழுத்துங்கள்


கன்னிப் பிறப்பு உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வாதிடுவது போல, மாற்குவும் யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி தங்களுடைய நற்செய்தி நூல்களில் குறிப்பிடாதது, இயேசுவின் கன்னிப் பிறப்பு நம்பகமானதல்ல என்பதற்கான சான்று அல்ல. இவர்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி மட்டுமல்ல. அவருடைய பாலிய பருவத்தைப் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லையே. இதை வைத்துக் கொண்டு, இயேசுவுக்கு பாலிய பருவம் என்றொன்று இருக்கவில்லை என்று கூறமுடியுமா? எனவே இவர்கள் இருவரும் (மாற்குவும் யோவானும்) இயேசுவின் பிறப்பைப் பற்றி குறிப்பிடாதது, மத்தேயுவும் லூக்காவும் எழுதியுள்ளது போல இயேசுவின் பிறப்பு நிகழவில்லை என்பதற்கான ஆதாரமாகிவிடாது. மேலும், பேதுருவி்ன பிரசங்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே மாற்குவின் சுவிஷேசம் பேதுருவின் பிரசஙகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே மாற்குவி்ன் சுவிசேஷம். பேதுருவின் பிரசங்கத்தில் கன்னிப்பிறப்பு இடம் பெறாமைக்கான காரணம், றொகர்ஸ் சுட்டிக்காட்டியதுபோல, “மரியாள் அக்காலத்தில் உயிரோடிருந்தமையும், இயேசுவின் பிறப்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தமையுமேயாகும்.“ எனினும் மக்களுடைய வாயிலிருந்துகூட இயேசுவை யோசேப்பின் மகன் என கேட்க விரும்பாத மாற்கு, மக்களுடைய கருத்தை எழுதும்போது இயேசுவை “மரியாளின் குமாரன்“ (மாற். 6:3) என குறிப்பிட்டுள்ளமை, மாற்கு இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தார் என்பதையே புலப்படுத்துகின்றது. 

மாற்குவைப் போலவே யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி எழுதவில்லை. காரணம் மற்றைய மூன்று நற்செய்தி நூல்களும் எழுதப்பட்ட பின்பே யோவான் தன்னுடைய நூலை எழுதினார். .இதனால் மக்கள் அறிந்திருந்த விடயங்களை மறுபடியுமாக எழுதுவதை அவர் தவிர்த்துள்ளார். மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பைப் பற்றி தேவையான அனைத்துயும் ஏற்கனவே எழுதியிருந்தமையினால் யோவான் அவற்றை மறுபடியுமாக தன்னுடைய நூலில் சேர்த்துக் கொள்ளவில்லை. றொகர்ஸ் இதைப் பற்றி விளக்கும்போது “மக்கள் அறிந்தவற்றை மறுபடியுமாக எழுதுவது அவசியமற்றது. மற்றைய நற்செய்தி நூல்களில் இடம்பெறாதவைகளை எழுதிய யோவான் அவைகளில் உள்ளவற்றை மறுத்துரைக்கவுமில்லை. மட்டுல்ல. அக்காலத்தில் மக்கள் கன்னிப்பிறப்பு ஏற்றுக் கொண்டிருந்தமையால் அதைப் பற்றி எழுத வேண்டிய அவசியமும் இருக்கவில்லை“ என்று அறியத் தந்துள்ளார். எனினும் ஆதியிலிருந்தே தேவனோடு இருந்த வார்த்தை (1:1) மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார். (1:14) என இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிவிக்கும் யோவான் இயற்கைக்கும் அப்பாற்பட்ட முறையில் இயேசு உலகிற்கு வந்ததை பல்வேறுப்பட்ட முறைகளில் வர்ணித்துள்ளார். ஜோன் ஸ்டொட் சுட்டிக்காட்டியது போல “பரலோகத்திலிருந்து வருகிறவர் (3:31) வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம் (6:51) தேவனால் அனுப்பப்பட்டவர்(3:34) போன்ற சொற்பிரயோகங்கள் அவருடைய பிறப்பு சாதாரணமானதல்ல என்பதையே அறியத்தருகின்றன.“ மேலும், “இயேசு சிலுவையிலறையப்பட்டதிலிருந்து, மரியாள், கடைசிவரை யோவானுடைய பாரமரிப்பில் இருந்துள்ளமையால் (யோவான 19:26-27) யோவான் இயேசுவின் பிறப்பைப் பற்றி அறியாதிருந்தான் என வாதிடுவது அர்த்தமற்றது“ என்பதை ஜேம்ஸ் ஓர் நம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

யோவானைப் போலவே அப்போஸ்தனாகிய பவுலும் இயேசுவின் இயற்கைக்கும் அப்பாற்பட்ட பிறப்பை வர்ணித்துள்ளார். “.இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்( 1 கொரி. 15:47) தாவீதின் சந்ததியில் பிறந்தவர் (ரோமர் 1:5) தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் (1 தீமோ. 3:16) என இயேசுவைப் பற்றி எழுதியவர், அவருடைய கன்னிப் பிறப்பைக் குறிப்பிட, “காலம் நிறைவேறின போது ஸ்திரியினிடத்திற் பிறந்தவர் (கலா. 4:5) என அறியத் தந்துள்ளார். நற்செய்தி நூலாசிரியர் லூக்காவின் நண்பான இருந்த பவுல், லூக்காவின் மூலமாக இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி அறிந்திருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அனைவருமே இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் இதைப் பற்றி அதிகம் எழுதாதபோதிலும் அவரக்ள் எழுதியுள்ளவைகள் இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்வதற்கு போதுமான ஆதாரங்களாக உள்ளன. அனைவருடைய குறிப்புகளிலும் காணப்படும் ஒற்றுமை, இவ்வுபதேசத்தைப் பற்றி சந்தேகப்படுவது அவசியமற்றதும் அர்த்தமற்றதுமான செயல் என்பதையே அறியத தருவதாயுள்ளது. 

கன்னிபிறப்பு உபதேசம் நம்பகமானது என்பதற்கு, புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின் குறிப்புகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றுதலாக இது இருப்பதும் மேலதிகமானதொரு ஆதாரமாக அமைகின்றது. மேசியா இவ்வுலகிற்கு எவ்வாறு வருவார் என பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்கள் முன்னறவித்திருந்தனவோ, அதேவிதமாக இயேசு மனிதனாக இவ்வுலகுகக்கு வந்துள்ளதை புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம். இயேசுவின் மானிட பிறப்பைப் பற்றிய முதல் தீர்க்கதரிசனம் ஆதியாகமம் 3:15 இல் உள்ளது. இதில் இயேசுகிறிஸ்து “ஸ்திரியின் வித்தாக“ குறிப்பிடப்பட்டுள்ளார். ஜோஸ் மெக்டோவெல் சுட்டிக்காட்டியது போல, “இயேசுகிறிஸது ஸ்திரியின் வித்தாக இவ்வுலகிற்கு வந்தாரேயன்றி, பொதுவாக இனப்பெருக்க முறையின்படியான ஆணின் வித்தின் மூலமாக அல்ல“ அதேபோல மேசியாவின் பிறப்பைப் பற்றிய இன்னுமொரு தீர்க்கதரிசனப் பகுதியான மீகா 5:2-3 இலும் பெத்லகேமில் பிறக்கும் இஸ்ரவேலை ஆளும் பிரபுவினுடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது, ஆனாலும் பிரசிக்கிறவள் பிரசவிக்கிற மட்டும் அவளை ஒப்புக்கொடுப்பார்“ என காணலாம். இவ்வசனத்தில் ஜோன் பெவென்கர்க் சுட்டிக் காட்டியது போல “பிரசவிக்கிறவள் மரியாளைக் குறிக்கிறது“ என்பது உண்மையே. இதனால் தான் பவுலும் இயேசுவை ஸ்திரியிடத்தில் பிறந்தவர் (கலா. 4:5) என குறிப்பிட்டுள்ளார். 

தீரக்கதரிசன நிறைவேறுதல் கன்னிப் பிறப்பு உபதேசத்தை எவராலும் மறுக்க முடியாது. ஸ்திரியின் வித்தாக முன்னறிவிக்கப்பட்ட அவர் (ஆதி. 3:15) கன்னிப்பெண் மூலமாக பிறப்பார் எனும் தீர்க்கதரிசனத்தின்படி (ஏசா 7:14) ஸ்திரியினிடத்தில் பிறந்தார்(கலா. 4:5) கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் இயேசு பிறந்தார் என அறியத்தரும் மத்தேயு “தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. (1:22) என கூட்டிக்காட்டிவிட்டு கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனைப் பெறுவாள் என எசாயா 7:14 இல் அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தைக் குறிப்பி்ட்டுள்ளார். (1:23) கன்னிப்பெண் கர்ப்பவதியாளவாள் என கூறப்பட்டது, பரிசுத்தாவியினால் கர்ப்பவதியாகி இயேசுவைப் பெறுவதில் நிறைவேறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் ஏசாயா உண்மையிலேயே கன்னிப் பெண்ணைப் பற்றி குறிப்பிட்டிருந்தால் “பெத்உல்லா(bethulah) எனும் எபிரேயப் பதத்தினையே உபயோகித்திருக்க வேண்டும். மத்தேயு கன்னிப்பெண்ணைக் குறிக்கும் “பார்தினொஸ் (Parthenos) எனும் கிரேக்க பதத்தை உபயோகித்தது பிழை. அவர் திருமண வயதையடைந்த இளம்பெண்ணைக் குறிக்கும் கிரேக்க பதமான “நியானிஸ்” சையே(neanis) உபயோகித்திருக்க வேண்டும் என வாதிடுவோரும் உண்டு.

கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏசாயா உபயோகித்த பதமான “அல்மா“வின் (almah) சரியான அர்த்தம் என்ன என்பத பற்றிய தர்க்கம் நிலவிருவது உண்மையே. எனினும் எபிரேய மொழிவல்லுநரும், இறையிலளாளரும் ஏற்பாடடு வேதப்பண்டிதருமான மறைந்த ஈ.ஜே.யங் என்பார் தெரிவித்ததுபோல ஏசாயா உபயோகித்த “அல்மா“ எனும் பதம், பழைய  ஏற்பாட்டிலோ அல்லது மற்றைய எபிரேய இலக்கியங்களிலோ திருமணமான பெண்ணைக் குறிக்க உபயோகிக்கபடவேயில்லை. மட்டுமல்ல, எப்போதும் கன்னிப்பெண்ணை மட்டுமே குறிக்கும் பதமும் எபிரேய மொழியில் இல்லை. அத்தோடு ஏசாயா 7:14 இல் உள்ள பதத்திற்கு இணையான ஆங்கில வார்த்தையும் இல்லை. இப்பதம் ஆங்கிலத்தில் demsel (இளம் பெண்) அல்லது maiden (சிறுமி) எனும் அர்ததங்களையே தரும். எனினும் இப்பதங்கள் திருமணமான பெண்களுக்குப் பொருத்தமற்றது. என்பதும் உண்மையே. “அல்மா“ எனும் பதம் திருமண வயதையடைந்த இளம் பெண்யையே குறிக்கின்றது என்றாலும் ஆதி 24:43, யாத். 2:6, சங். 68:25, நீதி. 30:19, உன். 1:3, 6:8 வசனங்களில் இப்பதம் திருமணமாகாத கன்னிப்பெண்களைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டுள்ளமையால் ஏசாயா 7:14 இலும் இதே அர்த்த்ததுடனேயே உபயோகிக்க்பபட்டிருக்க வேண்டும். “பழைய ஏற்பாட்டில் இவ்விடங்களில் மட்டுமே “அல்மா“ எனும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது“ என கூறும் ஹென்றி மொரிஸ், “இப்பதத்தின் சரியான அர்த்தம் சர்ச்சைக்குரியதாகயிருந்தாலும், வேதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள இடங்களில் கன்னிப் பெண்ணைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல சில இடங்களில் இதைத் தவிர வேறு அர்த்தங்கள் இல்லாததாகவும் உள்ளது என அறியத் தருகிறார். மேலும், வில்லியம் ஹென்றிக்சன் சுட்டிக்காட்டியது போல, “சில சமயங்களில் திருமணமான பெண்ணைக் குறிக்கவும், அதேசமயம் க்னனிப் பெண்ணைக் குறிக்கவும் உபயோகிக்கப்படும் எபிரேய பதமான “பெத்உல்லா“ ஏசாயா 7:14 குறிப்பிடப்படாதது, எப்போதும் கன்னிப் பெண்ணை மட்டுமே குறிக்கும் கிரேக்க பதமான “பார்தினொஸ்“ மத்தேயுவினால் உபயோகிக்கப்பட்டது. இயேசு க்னனிப் பெண்ணான மரியாளிடம் பிறந்தது உண்மை என்பதற்கான ஆதாரமாகின்றது. மட்டுமல்ல. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பழைய ஏற்பாட்டு முதன் முதலில் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க்பபட்ட போது இப்பணியை மேற்கொண்ட 70 மொழியில் வல்லுநர்களும் ஏசாயா 7:14 இலுள்ள “அல்மா“ கன்னிப் பெண் என்பதனால் அதை சரியான விதத்தில் “பார்த்தினொஸ்“ என மொழிபெயர்த்துள்ளனர். இதுவும் ஏசாயா கன்னிப் பெண் கர்ப்பவதியாவதைப் பற்றியே எழுதியுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

இயேசுவின் கன்னிப்பிறப்பு நம்பகமானது என்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ளாத அறிவியலாளர்கள், வேதத்தில் உள்ள கன்னிப்பிறப்பு புராணக் கதையொன்றின் தழுவல் என வாதிட்டு வருகின்றனர் விஞ்ஞான யுகத்தில் வாழும் நாம் பின்தங்கிய மூடக்கொள்கையுடைய காலகட்டத்தில் எழுதப்பட்ட நூலை நம்பமுடியாது என தர்க்கின்றனர். எனினும் இறையியல் அகராதி சுட்டிக்காட்டுவது போல், “இயேசுவின் கன்னிப் பிறப்புக்கு இணையான கதைகள் எதுவும் ஆதிகால புராணங்களில் இல்லை. என்பது உண்மையே. புராணங்களில் உள்ள கதைகள் தேவர்களுக்கும் மானிட பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகளைப் பற்றி வர்ணித்தாலும் அப்பிள்ளைகள் பாதி மனிதனாகவும் பாதி தேவனாகவும் இல்லையென்றால் பாதி மனிதனாகவும் பாதி மிருகமாகவும் இருந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் இயேசு கிறிஸ்து இப்படிப்பட்டவராக இவ்வுலகத்தில் இருக்கவில்லை. அவர் முழுமையான  மனிதனாகவும் அதேசமயம் முழுமையான தேவனாகவும் இருந்தார். மட்டுமல்ல வே நூல் ஆசிரியர்கள் புராணக கதைகளை எழுதவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, புராணக் கதைகளை விட்டு விலகச் சொல்லி, மக்களுக்கு கட்டளையிட்டவர்கள், தங்களுடைய புத்தகங்களில் புராணங்களை எழுதினார்கள் என்று சொலவது அர்த்தமற்றது. “சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” (1 தீமோ. 4:7) என கட்டளையிட்ட பவுல் “
வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும்முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,(1 தீமோ. 1:3) ,இயேசுவின் கன்னிப்பிறப்பு புராணக்கதையாயிருந்தால் அதையும் விடடுவிலகச்சொல்லி கட்டளையிட்டிருந்திருப்பார் என்பதையே புலப்படுத்துகின்றது. ஆனால், தன்னுடைய நண்பனான லூக்கா இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி எழுதியவைகள் சரித்திரபூர்வமான உண்மையாயிருந்தமையினாலேயே இயேசுவை “ஸ்திரியினிடத்தில் பிறந்தவர்“ (கலா. 4:5) என்று குறிபபிட்டு, கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அது புராணமாயிருந்திருந்தால் அவர் நிச்சியம் அதை நம்ப வேண்டாம் என எழுதியிருப்பார். 

ஆதிச்சபை விசுவாசிகள் புராணத் தெய்வங்களையெல்லாம் விட்டுவிட்டு அவை உண்மையல்ல என்று அறிந்து, ஜீவிக்கும் மெய்யான தேவனை சேவித்தவர்கள். இயெசுவின் பிறப்பு புராணமாயிருந்திருந்தால் அவர்கள் அதை நம்பயிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் கன்னிப்பிறப்பை நம்பியவர்கள், இவர்களைப் ப்றறி பவுல் எழுதும்போது “ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிப்பவர்கள் (1 தெச. 1:9-10) என குறிப்பிட்டுள்ளார். விக்கிரகங்களை விட்டுத் தேவனிடத்திற்கு மனந்திருப்பியவர்கள்“ என கூறும்போது அம்மதங்களின் புராணக் கதைகள் அனைத்தையும் பொய்யென்று கருதியமையே ஜீவனுள்ள உண்மையான தேவனை நம்ப காரணமாயமைந்தது என்பதையே புலப்படுத்துகின்றது. எனவே, இயேசுவின் கன்னிப் பிறப்பு புராணமல்ல உண்மைச் சம்பவம் என்பதை அறிந்து ஏற்றுக் கொண்டவர்களே இவர்கள் என்பதில் எவ்வித சநதேகமுமில்லை. மேலும் ரேமண்ட் பிரவுண் என்பார் குறிப்பிட்டது போல “இயேசுவின் தாய்,ஈ சகோதரர், குறிப்பாக யாக்கோபு என்போரது பிரசன்னம் (அப். 1:14, 15:13, கலா. 1:19, 2:9) இயேசுவின் பிறப்பைப் பற்றிய புராணக்கதைகள் உருவாவதை நிச்சியம் தடுத்திருக்கும்“ மட்டுமல்ல சரித்திராசிரியரும் வைத்தியருமான லூக்கா “சகலவற்றையும் திருவிசாரித்தறிந்த தன்னுடைய நற்செய்தி நூலை எழுதிள்ளமையும்( 1:1-4) அவர் புராணக் கதையை எழுதியிருக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. இயேசுவின் கன்னிப்பிறப்பு உண்மைச் சம்பவம் எ்னபதனாலேயே ஆதிச்சபை இதை விசுவாசப் பிரமாணத்தில் சேர்த்துக் கொண்டது. இதைப் பற்றிய வேதாகமக் குறிப்புகளும் முற்றிலும் நம்பகமானவை. இயேசுவின் கன்னிப்பிறப்பு எவருடைய கற்பனையுமல்ல. மாறாக கற்பனைக்கும் எட்டாத அற்புத தேவன் தன் மைந்தனை இவ்வுலகுக்கு அனுப்பிய உண்மைச் சம்பவமாகும். 
.

(இ) அதன் அவசியம்




கன்னிப்பிறப்பு உபதேசத்தின் அர்த்தத்தையும் அதற்கான ஆதாரங்களையும் கடந்தமுறை பார்த்தோம். எனினும் இவ்வுபதேசத்தைப் பற்றி இந்த அளவுக்கு விபரமாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்தானா? என நாம் வினவலாம். சிலர் இவ்வுபதேசம் முக்கியமானதொன்றல்ல. இதை நம்புவதும் நம்பாமலிருப்பதும் நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது. ஒருவன் இரட்சிப்படைவதற்கு இவ்வுபதேசத்தைப் பற்றிய அறிவு அவசியமற்றது. எனவே இதைப்பற்றி அதிகளவு அலட்டிக் கொள்ளக்கூடாது என கருதுகின்றனர். எனினும் இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் - அது அவசியமற்றது என வாதிடுபவர்கள், இவ்வுவதேசத்தைக் கற்பனைக் கதை என கருதுபவர்களே என்றால் அது மிகையாகாது. மட்டுமல்ல, லொறேன் பொயிட்னர் குறிப்பி்ட்டது போல, “இயேசுவின் கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொள்ளாதவன், வேதத்திலுள்ள மற்றைய அற்புத சம்பவங்களையும் நம்பாதவனாகவே இருப்பான். “எனவே இவ்வுபதேசததைப் பற்றிய ஒரு மனிதனுடைய நம்பிக்கை மிக மிக முக்கியமானது. மேலும், இவ்வுபதேசம் கிறிஸ்துவைப் பற்றிய மற்றைய உபதேசங்களுடன் தொடர்புடையதாயிருப்பதனால் இதை அவசியமற்ற உபதேசம் என நம்பாமல் ஒதுக்கிவிட முடியாது, ஜேம்ஸ் ஓர் தெரிவித்தது போ, “கிறிஸ்துவைப் ப்றிய நாம் விசுவாசிப்பவைகளில் இருந்து, கன்னிப்பிறப்பை பற்றிய நம்பிக்கை பிரித்துவிட முடியாது“ என்பதை மறுப்பதற்கில்லை. முதலாவதாக, கன்னிப்பிறப்பு உபதேசமானது கிறிஸ்துவினுடைய தெய்வீகத் தன்மையுடன் (Divinity) தொடர்புடையது, இயேசுவின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பது அவருடைய தேவத்துவத்தை மறுதலிப்பதாகும. இயேசு தேவனாயிருந்தமையால், சாதாரண பிறப்பு மூலம் அவர் இவ்வுலகத்திற்கு வந்திருக்க முடியாது. இதனாலேயே இயற்கைக்கம் அப்பாற்பட்ட கன்னிப்பிறப்பு அவசியமாகியது, “இயேசுவின் தேவத்துவத்தை மறந்துவிடுதவாயேயே கன்னிப்பிறப்பின் நிஜத்தையும் அவசியத்தையும் அநேகர் மறந்துவிடுகின்றனர்“ என லெறேன் பொயிட்னர் அறியத்தருகிறார். இயேசுகிறிஸ்து தேவனாக இருப்பதனால் அவருடைய கன்னிப்பிறப்பை பறறிய நம்பிக்கை நம்முடைய விசுவாசப்பிரமாணத்திற்கு அவசியமாயுள்ளது மட்டுமல்ல, கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பவன் அவருடைய தேவத்துவத்தையும் மறுதலிப்பதனால்ஈ யோவான் சுட்டிக் காட்டுவதுபோல அத்தகைய மனிதன் அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவியை உடையவனாகவே இருப்பான். (1 யோவான் 4:1-3) கன்னிப்பிறப்பைப் பற்றிய நம்பிக்கை “மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை தேவன் என அறிக்கையிடுவதற்கான சான்றுகளுள் ஒன்றாய் அமைவதோடு, நாம் தேவனுடையவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. (4:2) எனவே, இவ்வுபதேசத்தை நம்புவதும் நம்பாததும் அற்பமான விடயமல்ல. நாம் தேவனுடைய ஆவியை உடையவர்களாக அல்லது அந்திக்கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாக எ்னபதைக் கண்டறிய, இவ்வுபதேசத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் ஒரு காரணமமைகிறது என்றால் அது மிகையாகாது. 

இரண்டாவதாக இயேசுவினுடைய பாவமற்ற தன்மைககும் (Sinless Nature) கன்னிப்பிறப்பு காரணமாகிறது. அவர் சாதாரணமான முறையில் பிறந்திருந்தால். பாவத்துடனேயே பிறந்திருப்பார். ஆனால் அவர் பரிசுத்தவியானவர் மூலமாக கன்னிப் பெண்ணிடத்தில் பிறந்தமையால் பாவமற்றவராக இருந்தார். அவருக்கு அன்பாயிருந்த சீடன் “அவரிடத்தில் பாவமில்லை. (1 யோவான் 3:5) என குறிப்பிட்டுள்ளார். அப்போஸ்தலனாகிய பேதுருவும் “அவர் பாவஞ் செய்யவில்லை. (1 பேதுரு 2:22) என கூறுகிறார். அவர் “பாவம் அறியாதவர்“ (2 கொரி. 5:21) என பவுலும் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில், அவர் எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் (எபி.4:15) பரிசுத்தரும், குற்றமற்றவரும் மாசிலலாதவரும் பாவிகளுக்கு விலகினருமாயிக்கிறார். (2:26) இதனால் தான் “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? (யோவான் 8:46) என அவரே ஒருமுறை கேட்டார். 

தான் பாவமற்றவர் என்பதை இயேசு அறிந்திருந்தமையினாலேயே தன்னுடைய பாவமன்னிப்பிற்காக அவர் ஜெபிக்கவேயில்லை. மட்டுமல்ல நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு அதன்படி வாழ்நத இயேசு ஆலயத்திற்கு தவறாது சென்றாலும் கூட அவர் ஒருநாளும் எந்தவொரு பலியையும் செலு்த்தவேயில்லை. காரணம் பாவமற்ற அவர் பாவநிவாரணத்துக்காக பலி செலுத்த வேண்டியிருக்கவில்லை. இதையெல்லாம் ஏற்றுக்கொள்பவனால் கன்னிப்பிறப்பை நம்பாமல் இருக்கவே முடியாது. லொறேன் பொயிட்னர் சுட்டிக்காட்டியது போல, “மானிட ஆள்தத்துவத்தையல்ல, மானிட தன்மையையே இயேசு மரியாளிடத்திலிருந்து பெற்றமையால், அவரை பாவி என நம்மால் கூறமுடியாது. அவர் எந்த ஒரு மனிதனுடைய குமாரனுமல்ல, இதனால் அவர் பாவமற்றவராக இருந்தார். மரியாளிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது. தேவனுடைய குமரன் எனப்படுவார் (லூக். 7:35) என தேவதூதன் தெரிவித்தது போல அவர் பாவமற்றவராக இருந்தார். கன்னிபிறப்பை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இயேசு பாவமற்றவர் என்பதனால் கன்னிப்பிறப்பு அவசியமற்றதாகின்றது.“

மூன்றாவதாக கன்னிப்பிறப்பு உபதேசம், கிறிஸ்துவின் சிலுவைப்பலியுடன் தொடர்புடையதாக உள்ளது. மறைந்த பிரபல இறையியலாளர் பெஞ்சமின் வோர பீல்ட் குறிப்பிட்டது போல, “புதிய ஏற்பாட்டு மீ்ட்பின் உபதேசத்து்டனான தொடர்பிலேயே கன்னிபிறப்பு உபதேசத்தின் அவசியம் முழுமைபெற்று விளங்குகின்றது“. மீட்பானது, பாவத்திலிருந்து மீட்கப்படுவதாயிருப்பதனால் மக்களை பாவத்திலிருந்து மீட்கும் மீட்பர் பாவமற்றவராக இருக்க வேண்டும். எனவே, மீட்பர் சாதாரண முறையில் இவ்வுலகிற்கு வருவதில் எவ்வித பயனுமிருக்காது. காரணம் கன்னிப்பிறப்பு மட்டுமே பாவமற்றவராக மீட்பர் இவ்வுலகிற்கு வருவதற்கு மாரக்கமாயிருக்கிறது. பெஞ்சமின் வோர்பீல்ட் மேலும் இதைப்பற்றி எழுதும்போது “கிறிஸ்துவின் மீட்பின் செயல், அவருடைய இயற்கைக்கும் அப்பாற்பட்ட பிறப்பைச் சார்ந்துள்ளது“ என அறியத் தந்துள்ளார். 

கன்னிப்பிறப்பு உபதேசமானது. இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்துடனும் அவருடைய பாவமற்ற தன்மையுடனும், அவருடைய மீட்பின் செயலுடனும் சம்பந்தப்பட்டிருப்பதனால், இதை ஏறறுக்கொள்ளமலிருப்பது, இதனுடன் சம்பந்தமற்றவைகளையும் ஏற்றுக்கொள்ளாமலிபதபற்கு சமமானது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, கன்னிப்பறிப்பு உபதேசத்தை நம்முடைய விசுவாசப் பிரமாணத்ததில் சேர்த்துக் கொண்டு அது, சரித்திரத்தல் நடைபெற்ற உண்மை சம்பவமாக விசுவசிப்பது நம்முடைய கிறிஸ்தவ வாழ்வுக்கு மிக மிக அவசியமானது. இதை ஒரு கற்பனை கதையாக கருதுவதும்- இது முக்கியமானதொன்றல்ல என எண்ணுவதும் அர்த்தமற்ற அறிவீனமான செயலாகும். தேவனுடைய பிள்ளைகளுக்கு இந்த உபதேசம் அவசியமானதும், அடிப்படையானதும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 




Footnotes
1) Collected writing of John Murry vol. 2
2) The Virgin Birth of Christ by James Orr
3) Authentic Jesus, by John Stott
4) Thy word is Truth, by E.J.Young
5) The Virgin Birth of Christ, by Machen
6) The Virgin Birth by R.I.Humberd
7) The Plain man looks at the Apostle's Creed by William Barclay
8) Sermons on the Apostle's Creed, ed. by Hery J. Kulper
9) The Bible has the Answers by Henry Morris
10) Evidence that demands a Verict by John Mc Dowell
11) The Case for Miracles by Clements F. Rogers
12) Evangelical Dictionary of Theology ed. by Walter A. Elweli.
13) Christology and Criticism by B.B. Warfield
14) Christianity is Christ by Griffith Thomas
15) New Testament Commentary : Mathew, by William Hendriksen
16). The Person of Christ by Loraine Boe Hner

Wednesday, 21 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா? (3)

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க பகுதி 1, பகுதி 2  அழுத்துங்கள்

மத்தேயுவும் லூக்காவும் முரண்பாடான சம்பவங்களை எழுதியுள்ளார்கள் என வாதிடுவது அர்த்தமற்றது. ஏனெனில் முரண்பாடுகளையல்ல, ஒன்றுமைகளையே நாம் அதிகளவில் இரண்டிலும் காணலாம். மறைந்த இறையியலாளர் ஜேம்ஸ் ஓர் என்பார் கன்னிப்பிறப்பைப் பற்றி தான் எழுதிய நூலில், இரண்டு குறிப்புகளுக்குமிடையேயுள்ள 12 ஒற்றுமைகளை கூட்டிக் காட்டியுள்ளார். 

(1) ஏரோது ராஜாவின் இறுதிநாட்களில் இயேசு பிறந்தார் மத். 2:1,13 , லூக் 1:5

(2) அவர் பரிசுத்த ஆவியானாலேயே கர்ப்பந்தரிக்கப்பட்டார். மத்.1:18,20 , லூக் 1:35

(3) அவருடைய தாயார் ஒரு கன்னிப் பெண்  மத்.1:18,25,23 லூக் 1:27,34

(4) யோசேப்புக்கு அவள் மனைவியாக நியமிக்கப்பட்டிருந்தாள் மத்.1:18 லூக் 1:27, 2:4

(5) யோசேப்பு தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவன் மத்.1:16,20 , லூக் 1:27, 2:4

(6) இயேசு பெத்தலகேமில் பிறந்தார். மத்.2:1 , லூக் 2:4-6

(7) தேவ அறிவுறுத்தலின்படி அவருக்கு இயேசு எனும் பெயர் கொடுக்கப்பட்டது. மத்.2:1 , லூக் 1:31

(8) அவர் இரட்சகர் என அழைக்கப்பட்டார். மத்.1:21 , லூக் 2:11

(9) மரியாள் கர்ப்பவதியாயிருந்தது யோசேப்புக்கு தெரிந்திருந்தது. மத்.1:18-20 , லூக் 2:4

(10) அவள் கர்ப்பவதி என்று அறிந்து அவளை யோசேப்பு ஏற்றுக் கொண்டான். மத். 1:20,24,25 , லூக் 2:4

(11) தேவதூதன் மூலம் தகவல்கள் கொடுக்கப்பட்டன. மத். 1:20 , லூக் 1 :27, 28 

(12) இயேசுவின் பிறப்பின் பின் யேசேப்பும் மரியாளும் நாசரேத்தில் குடியிருந்தனர். -மத். 2:23, லூக் 2:39. 

உண்மையில் இத்தனை ஒற்றுமைகளைக் கொண்ட இரு குறிப்புகளும் முரண்பாடுடையது, நம்பகமற்றது என வாதிடுவது நியாயமற்றதும் அர்த்தமற்றதும், அறிவீனமானதுமான செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. 

மத்தேயுவினதும், லூக்காவினதும் ஆதாரக் குறிப்புகளிடையே எவ்விதமான முரண்பாடும் இல்லை என்பது உண்மையினும் இருவர் குறிப்பிடும் வம்சவராற்று அட்டவணைகளையும் சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், ஒருசில வித்தியாசங்களையும் அவதானிக்கலாம் என்பதும் உண்மையே. எனினும் ஒரு வம்சவரலாறு நம்பகமற்றது, பிழையானது எனும் முடிவுக்கு வ்நதுவிடும் அளவுக்கு மற்றறையது வேறுபட்டுவிடவில்லை. பொதுவான ஒற்றுமையே நாம் இரண்டிலும் காணலாம். மத்தேயுவின் வரலாற்று அட்டவணையில் பெண்களின் பெயர்களையும் வரலாறானது பதினான்கு தலைமுறைகளைக் கொண்ட மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். ஆனால் லூக்காவினது, வழமையான வம்சவரலாற்று அட்டவணையை போலல்லாது, பின்நோக்கிச் செல்கின்றது. ஜேம்ஸ் ஓர் குறிப்பட்டது போல “இயேசுவை தாவீதின் ராஜ பரம்பரையில் வந்தவராக காட்டுவதே மத்தேயுவின் நோக்கமாயிருந்தது. (1:1) லூக்காவோ தாவீதுக்கும் அப்பால் சென்று, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை அறியத் தருகிறார். (3:38) எனினும் அவ்வம்சவரலாற்று அட்டவணைகள் மத்தேயுவினாலும், லூக்காவினாலும் உருவாக்கப்ட்டவை அல்ல. அக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த வரலாற்று அட்டவணைகளே இருவராலும் உபயோகிக்கப்பட்டுள்ளன என்பது தேவ ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும். இவை பொய்த் தகவல்களைத் தருகின்றன என்பதற்கான சரித்திரபூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. 

மத்தேயுவினதும் லூக்காவினதும் வம்சவரலாற்று அட்டவணைகள் நம்பகமானவை. ஆதாரபூர்வமான என்பது உண்மையோயினும் இரண்டையும் கருத்தாய் ஆராய்ந்து பார்க்கும்போது ஒருசில வித்தியாசங்களை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக, தாவீத்துக்குபின் வம்சவரலாற்றில் பாரியதோர் வித்தியாசம் காணப்படுகின்றது. தாவீதுக்குப் பின் வேறுபட்ட இரண்டு வம்சவரலாறுகளை நாம் அவதானி்க்கலாம். மத்தேயுவின் வம்சவரலாறு தாவீதின் குமாரனான சாலமோனுடைய பரம்பரையை பற்றி குறிப்பிடுகையில் (1:6) லூக்காவினுடையது, தாவீதின் மற்றுமொரு குமாரனான நாத்தானுடைய பரம்பரையை பற்றி அறியத் தருகிறது. (3:31) தாவீதுக்குப் பின் ஒருசில இடங்களில் மட்டுமே வம்சவரலாறுகள் ஒன்றையொன்று சந்திப்பதாயிலுள்ளன. மற்ற இடங்களில் எவ்வித தொடர்பும் இல்லாமலிருப்பது, இவை எந்த அளவுக்கு நமபகமானது என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாயிலுள்ளது என அநேகர் வாதிடுகின்றனர். எனினும் ஜேம்ஸ்ஓர் இதைப் பற்றி எழுதும்போது, இதில் முரண்பாட்டையல்ல, எவ்வாறு இதை விளக்குவது என்பதே நாம் எதிர்நோக்கும் பிரச்சினையாகும். எனினும் மத்தேயு குறிப்பிடுவது யோசேப்பின் வம்சவரலாறு, லூக்கா குறிப்பிடுவது மரியாளின் வம்சவரலாறு எனும் முடிவுககு வருவதில் எவ்வித தவறுமில்லை. காரணம் மரியாளும் தாவீதின் பரம்பரையில் வந்தவள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உளளன“ என்று குறிப்பிட்டுள்ளார். மத்தேயு யோசேப்பைப் பற்றியும் லூக்கா மரியாளைப் பற்றியும் எழுதியுள்ளனர் என்பதும் இதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. 

மத்தேயு சாலமோனின் பரம்பரையில் வந்த யேசேப்பின் வம்ச வரலாற்றையும், லூக்கா நாத்தானின் பரம்பரையில் வந்த மரியாளின் வம்ச வரலாற்றையும் குறிப்பிபட்டாலும் இது இரணடு வித்தியாசமான பரம்பரை எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது. காரணம் சாலமோனும் நாத்தானும் பத்தேசபாளிடத்தில் தாவீதுக்குப் பிறந்த பிள்ளைகள் எனவே யோசேப்பும் மரியாளும் தாவீதின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும், மத்தேயும் லூக்காவும் குறிப்பிட்டடுள்ள வம்சவரலாறுகளில் உள்ள முக்கியமான ஒரு வித்தியாசமும் இதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதாயுள்ளது. எனினும் மேலோட்டமாக வாசிக்கையில் நமக்கு குழப்பதையே இது ஏற்படுத்துகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. யோசேப்பு ஏலியின் குமாரன் (3:23) என லூக்கா கூறுகின்றார். ஆனால் மத்தேயுவோ அவர் யாக்கோபின் குமாரன் என குறிப்பிட்டுள்ளார். (1:16) இதனால் யோசேப்புக்கு இரண்டு தகப்பன்கள் இருந்தார்களா எனும் கேள்வி நம்முள்ளத்தில் எழுந்து, எதை நம்புவது எனும் குழப்பத்தை ஏற்படுததி விடுகிறது. எனினும் ஹென்ரி ஜே. கைப்பரினால் தொகுக்கப்பட்ட, அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்ட பிரசங்கங்களுள், ஜோன் பொலின் கர்க் என்பாருடைய கன்னிப் பிறப்பைப் பற்றிய பிரசங்கம் இச்சந்தேகததை நீக்கி, “யோசேப்பின் தகப்பன் யாக்கோபு. ஏலி அவனுடைய மாமனார் அதாவது மரியாளின் தகப்பன்“ என அறியத் தந்துள்ளது. மத்தேயுவைப் போல (1:6-16) லூக்கா யோசேப்பின் பரம்பரையைப் பற்றி எழுதாமல், மரியாளுடைய வம்ச வரலாற்றை அவளுடைய தகப்பனான ஏலியில் ஆரம்பித்து நாத்தானினூடாக தாவீதுடன் தொடர்புபடுத்தியுள்ளார். (3:23, 31) வம்ச வரலாறு வித்தியாசமாயுள்ளதற்கு இதுவே காரணமாகும். யோசேப்பைப் போலவே மரியாளும் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். 

மரியாள் தாவீதினுடைய பரம்பரையில் வந்தவள் என்பதை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்னவென நாம் வினவலாம். உண்மையில் மரியாளின் மூலமாகவவே இயேசு தாவீதின் சிங்காசனத்திற்கு உரியவரானார். அவர் யோசேப்பின் குமாரனாயிருந்திருந்தால் தாவீதினுடைய சிங்காசனததிற்கு உரிமை பாராட்டியிருக்க முடியாது, கிறிஸ்தவ மார்க்கத்தின் நம்பகமான தன்மைக்கு பல ஆதாரங்களை திரட்டியுள்ள ஜோன் மெக்டோவெல் இதைப் பற்றி விளக்கும்போது “தாவீதின் வம்சத்தில் வந்த எகொனியாவின் பரம்பரையைச் சேர்ந்தவனாக யோசேப்பு இருந்தமையால், இயேசு இவனது மகனாக இருந்திருந்தால் தாவீதின் சிங்காகனத்திற்கு உரியவராக இருந்திருக்க மாட்டார். காரணம் எரேமியாவின் தீர்க்கத்தரிசனப் புத்தகத்தில், இவனுடைய வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். (22:28-30) எகொனியா என மத்தேயு 1:11 இல் குறிப்பிடப்பட்டவனும் கோனியா என எரேமியா 22:28 இல் குறிப்பிடப்பட்டவனும் ஒருவனே. இவனுடைய பரம்பரையில் வந்தவனே யோசேப்பு (மத். 1:11-16) என சுட்டிக் காட்டியுள்ளார். ஆர்.ஐ. ஹம்பர்ட் எனபார், “யோசேப்பின் பிள்ளைகள் மீதும்  இச்சாபம் இருந்தது.  இயேசு யோசேப்புக்கு பிறந்திருந்தால் அவரும் இச்சாபத்திற்கு உட்பட்டிருப்பார்“ என தெரிவித்துள்ளார். 

யோசேப்பின் பரம்பரையின் மீதிருந்த தேவசாபத்தை கருத்திற் கொள்கையில், இயேசு யோசேப்பின் மகனாக இருந்திருந்தால், காபிரியேல் எனும் தூதன் மரியாளிடம் கூறியது போல “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது“ லூக்கா 1:32-33) என கூறியிருக்க முடியாது. எனவே, ஜோஸ் மெக்டோவெல் சுட்டிக் காட்டியதுபோல “மரியாளின் பரம்பரை சபிக்கப்பட்ட எகொனியாவினுடைய வம்சமாய் இல்லாமலிருப்பதனாலும்,“ ஜேம்ஸ் ஓர் தெரிவித்ததுபோல “மரியாளும் தாவீதின் வம்சத்தில் வந்தவள்“ என்பதனாலும்ஈ ஜோன் பொவென்கர்க் விளக்கியது போல, “மரியாளின் தகப்பனான ஏலியினுடைய வம்சம் நாத்தான் மூலமாக தாவீதுடன் சேர்வதனாலும், “மரியாளின் மூலமாகவே இயேசு தாவீதின் குமாரனாக, தாவீதின் அரியணைக்குரிய தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை மட்டுமல்ல மத்தேயுவும் லூக்காவும் இயேசு யோசேப்பின் குமாரன் அல்ல என்பதை சுட்டிக் காட்டத் தவறவில்லை. (மத். 1:16, 20, 25 லூக்கா 3:23) என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஏனெனில் இவையனைத்தும் கன்னிப்பிறப்பிற்கான ஆதாரங்களாக உள்ளன. 

இயேசு யோசேப்பின் பிள்ளை அல்ல; அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்த தேவனுடைய குமாரன் என மத்தேயுவும் லூக்காவும் தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளபோதும், மத். 13:55 இல், இயேசு “தச்சனுடைய குமாரன்“ என்றும் யோவான் 6:42 இலும் 1:45 இலும் “யோசேப்பின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இயேசு யோசேப்பின் குமாரன் என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா இவை என வாதிடுவோரும் நம் மத்தியில் உள்ளனர். எனினும் இவ்வசனங்களை ஆராய்ந்து பார்க்கும்போது இவை மக்களுடைய கருத்தேயின்றி, யோசேப்பின் குமாரன் இயேசு என்பதற்கான சான்றுகள் அல்ல என்பதை அறிந்திடலாம். அதாவது மக்கள் இயேசுவைப் பற்றி கருதியதையே வேதாகம நூலாசிரியர்கள் இவ்விடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இயேசு வளர்ந்த ஊரைச் சேர்ந்தவர்களே அவரை “தச்சனுடைய குமாரன் அல்லவா“ என கூறியதாக மத்தேயு 13:54-55 இல் காணலாம். அதேபோல் யோவான் 6:42 இலும் இயேசுவின் பிரச்ஙகத்தைக் கேட்டவர்களே “இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா... அப்படியிருக்க நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேனென்று இவன் எப்படி சொல்கிறான். யோவான் 1:45 இல் பிலிப்பே இயேசுவை யோசேப்பின் குமாரன் என கூறுகின்றான். இதற்குக் காரணம் மரியாள் யோசேப்பின் சட்டரீதியான மனைவியாயிருந்தமையினால் மரியாளுடைய குமாரனாகிய இயேசுவின் சட்ட ரீதியான தகப்பனாக யோசேப்பு கருதப்பட்டான். இதனாலேயே “அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். என 3:23 இல் லூக்கா குறிப்பிட்டுள்ளார். 


“கர்ப்பவதியாயிருந்த மரியாளை தன் மனைவியாக யோசேப்பு ஏற்றுக் கொண்டமையினாலேயே இயேசுவை அவனுடைய குமாரனாக மக்கள் கருதினார்கள். சமுதாயததின் பார்வையில் அவர் யோசேப்பின் குமாரனாகவே இருந்தார்.“ என ஹம்பர்ட் எனபார் அறியத் தந்துள்ளார். “இயேசு சிறுவனாக இருந்தபோது யோசேப்பை அப்பா என்றே அழைத்திருப்பார்“ என்பதை ஜேம்ஸ் ஓர் நம் கவனததிற்கு கொண்டு வந்துள்ளார். இதனடிப்படையிலேயே யோசேப்பையும் மரியாளையும் இயேசுவின் தாய் தகப்பன்மார் என லூக்கா 2:27 இலும் 2:41 இலும் எழுதியுள்ளார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் 2:33 இலும் 2:43 இலும் “யோசேப்பும் அவருடைய தாயாரும்“ என  இருவரையும் வேறுபடுத்தி, இயேசு யோசேப்பின் குமாரனல்ல மரியாளின் குமாரன் சுட்டிக் காட்ட லூக்கா தவறவில்லை என்பதையும் நாம் கருத்திற் கொள்ள மறந்துவிடக் கூடாது, மாற்கு மக்களின் அபிப்பிராயத்தை எழுதும்போது மிகவும் கருத்துடன் யோசேப்பின் பெயரைக் குறிப்பிடாது விட்டுள்ளார். பன்னிரண்டு வயதுடையவராயிருக்கும்போதேஈ இயேசு எருசலேம் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்ததிருக்கவும் அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும் அவர்கள் வினவவும் கண்ட யேசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 2:46-48) அச்சமயத்தில் மரியாள் இயேசுவிடம் “ உன் தகப்பனும் நானும் உன்னைத் தேடினோமே“ என்று கேட்டதற்கு (2:48) “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா“ என்று யோசேப்பு தன்னுடைய தகப்பன் அல்ல என்பதை வெளிப்படுத்தியதோடு தேவனே தன்னுடைய தகப்பன் என்று பலமுறை தெரிவித்துள்ளதையும் நற்செய்தி நூல்களில் நாம் காணலாம். 

மத்தேயுவும் லூக்காவும், கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களைத் தநதாலும் 52 அதிகாரங்களைக் கொண்ட (இரண்டும் சேர்ந்து) இவர்களுடைய நூலில் 2 அதிகாரங்கள் மட்டுமே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று புதிய ஏற்பாட்டின் மற்றைய பகுதிகள் எதுவுமே இது பற்றி கூறாதிருப்பதால் இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ள போதிய சான்றுகள் இல்லையென்றும் சிலர் வாதிடுகின்றனர. மற்றையவர்கள் இயேசுவின் பிறப்பை பற்றிய உண்மையை அறியாதிருந்தமையினாலேயே இதைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. இல்லையென்றால் எழுதியிருப்பார்கள் என்றும் தர்கிக்கின்றனர். ஆனால் மற்றைய நூலாசிரியர்கள் கன்னிப் பிறப்பைப் பற்றி அறியாதிருந்ததினால் அல்ல மாறாக அவர்களுடைய நோக்கத்திற்கு இது அவசியமாய் இராதமையினாலும், மத்தேயுவும் லூக்காவும் போதியளவு எழுதியிருந்தமையினாலும் அக்கால மக்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தமையினாலுமே, தங்களுடைய நூல்களில் நேரடியாக இதைப் பற்றி எழுதவில்லை. எனினும் மறைமுகமாக பல இடங்களில் இயேசுவின் பூலோகப் பிறப்பைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. மட்டுமல்ல இறையியில் அகராதி அறியத்தருவது போல், “மரியாளுடைய அந்தரக வாழ்வு அம்பலத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஆதிச்சபையில் கன்னி்ப் பிறப்பைப் பற்றி எவரும் அதிகமாக கதைக்கவில்லை“ என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். மத்தேயுவினதும் லூக்காவினதும் குறிப்புகள், இவ்வுபதேசத்தை நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. 
(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

Thursday, 15 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா?(2)

இதன் முதல் பகுதியை வாசிக்க இங்கு அழுத்தவும்

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 1:16-25 இலும் லூக்கா 1:26-38 இலும் இவ்வுபதேசம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுகிறிஸ்து பிறக்கும்வரை, யோசேப்பு மரியாளை அறியாதிருந்தான்“ என கூறும் மத்தேயு (1:25) 'இருவரும் கூடிவரும் முன்பே மரியாள் பரிசுதத ஆவியினால் கர்ப்பவதியானாள்“ (1:18) என்று அறியத்தருகிறார். இச்சம்பவம் நடைபெற்றபோது மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் என்பதை லூக்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். (1:26-38) “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் என கன்னிப் பெண்ணான மரியாளிடம் கூறிய தேவதூதன் (லூக். 1:35) தான் அறியாமலேயே அவள் கர்ப்பவதியாயிருப்பதனால் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்த யோசேப்பிடம் “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது“ என அறிவித்தான் (மத். 1:20) 

இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அதாவது, கன்னிப் பெண்ணான மரியாள் கருத்தரித்து இயேசுவெனும் தெய்வீகக் குழந்தையைப் பெற்றெடுத்ததைப் பற்றி மத்தேயுவும் லூககாவும் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நம்பகமானவை என்பதி்ல் எதுவித சந்தேகங்களுமில்லை. இவை சரி்த்திர பூர்வமான ஆதாரக் குறிப்புகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் எரோது ராஜாவின் நாட்களில் நடைபெற்றதாக மத்தேயு அறியத்தருகிறார். (2:1) சீரிய நாட்டில் சிரேனியு என்பவன் தேசாதிபதியியாக இருந்த போது, முதலாம் குடிமதிப்பு எழுதப்பட்ட வேண்டுமென அகுஸ்துராயனால் கட்டளை பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே இயேசு பிறந்தாரென லூக்கா மற்றுமொரு சரித்திர பூர்வமான ஆதாரத்தைத் தருகிறார். (2:1-6) சரித்திராசிரியராகவும், வைத்தியராகவும் இருந்த லூக்கா தான் முழுநிச்சியமாய் நம்புகின்ற சங்கதிகளை ஆரம்பமுதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் தங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறி்த்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏவப்பட்டபடியினால் ஆதிமுதல் எல்லாவற்றையும் விசாரித்தறிந்து எழுதியுள்ளமை (1:1-4) அவருடைய நூல் நம்பகமான என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களை தந்தாலும் கூட, அவர்களுடைய குறிப்புகளில் ஒருசில் அம்சங்கள் சற்று தெளிவற்றது போல காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. னினும் அவை எவ்வகையிலேனும் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பொய்யாக்கிவிடவில்லை. இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மட்டுமே, .இதை காரணம் காட்டி கன்னிப்பிறப்பு நம்பக்கூடியதொன்றல்ல என வாதிடுகி்ன்றனர். எனவே தெளிவற்றதுபோல தென்படும் பகுதிகளை நாம் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை எதிர்ப்பவர்களுக்கு தகுந்த பதில்களைக் கொடுப்பது இலகுவானதாயிருக்கும். 

மரியாள் கன்னிப் பெண்ணாக இருக்கும்போதே பரிசுத்தவாயினால் கர்ப்பவதியானாள் (1:18-20) யோசேப்புடன் எவ்வித தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை (1:25) என நேரடியாக குறி்ப்பிட்டிருந்தபோதிலும் இருவருக்கும் இடையிலான உறவுமுறை முன்னுக்குப் பின் முரணான விதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் தென்படுகின்றது. 1:18 'யோசேப்பு மரியாளுக்குப் புருஷனாக நியமிக்கப்டப்டிருந்தவன்“ என அறியத் தருகையில், அடுத்தஅவனம் இதை மறுத்து, யோசேப்பு மரியாளின் புருஷன்“ (1:19) என கூறுவதோடு “மரியாள் யோசேப்பின் மனைவி“ என்றும் தெரிவி்ககின்றது. (1:20) மட்டுமல்ல. 1:19 இல் யேசேப்பு மரியாளை தள்ளிவிட (விவாகரத்து செய்ய) மனதாயிருந்தான் என்றும் காணக்கிறோம். மரியாள் கர்ப்பவதியாயிருக்கும்போது, அவளுக்கும் யோசேப்புக்கும் இடையிலிருந்த உறவுமுறை இரண்டுவிதமாக அதாவது, நிச்சயதார்த்தம் செய்து கொண்டவர்களாகவும், திருமணம் முடித்த கணவன்-மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரியாள் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாகத் தான் இருந்தாளா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாதுள்ளது என வாதிடுவோரும் நம்மத்தியில் உள்ளனர். இயேசு யோசேப்புக்கு பிறந்த பிள்ளையாயிருக்கலாம் எனும் சந்தேகத்தை இது தோற்றுவிப்பதாக உள்ளது. என்று அவர்கள் கருதுகின்றனர். 

மரியாளுக்கும் யோசேப்புக்கும் இடையிலான உறவுமுறை இரண்டுவிதமாக மத்தேயுவினால் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையேயானும் இதை வைத்துக் கொண்டு, இயேசு பிறக்கும்பரை மரியாள் கன்னிப் பெண்ணாயிருக்கவில்லை, இயேசு யோசேப்புக்குப் பிறந்த குமாரன் என வாதிட்டால், 18ம், 25ம் வசனங்களுக்கு எவ்விதான விளக்கங்களைக் கொடுக்க முடியும்? இவையிரண்டும் கனனிப்பிறப்பு உபதேசததை நேரடியாக போதிக்கின்றது. எனவே உறவுமுறை வித்தியாசமான முறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்க வேண்டும். பாலஸ்தீன கலாச்சாரத்தில் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த திருமண வைபவ சடங்காச்சார முறைகளே இதற்கான காரணம் என மறைந்த வேத வியாக்கியானி வில்லியம் பாக்ளே அறியத்தருகிறார். “அவர்களது திருமண வைபவம் மூன்று படிமுறைகளைக் கொண்டிருந்தது. தம் பிள்ளைகள் சிறுவர் சிறுமியராயிருக்கும்பேது திருமணப் பொருத்தம் பார்த்து, இன்னார்க்கு இன்னார் என முடிவு செய்வது பெற்றோரின் வழக்கமாயிருந்தது, உரிய காலம்வரும்போது நிச்சயதார்த்தத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்படும் இதன் பின் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்பட்டனர். கன்னிவிதவைகள் அக்காலத்தில் பலஸ்தீனாவில் இருக்க இதுவே காரணமாகும். நிச்சியதார்த்தமானது சட்டரீதியாக இருவரையும் இணைப்பதாயிருந்தமையினால், விவாகரத்தின் மூலமே இவ்விணைப்பை முறிக்கக் கூடியதாயிருந்தது. நிச்சியதார்த்தத்தை மேற்கொண்டவர்கள் ஒருவருடத்தின் பின்பே திருமணம் செய்து இல்லற வாழ்வை மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள்“ என தெரிவிக்கும் வில்லியம் பாக்ளே “மத்தேயு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் நிச்சியதார்த்தத்திற்குப் பின் நடைபெற்றவைகளாகும். இதனால்தான் மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டவளாகவும், அவனது மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாள். இதனாலேயே யோசேப்பு அவனது புருஷனாகவும், அவளை விவாகரத்து செய்ய சிந்தனையுள்ளனாகவும் இருந்தான் என மத்தேயு எழுதியுள்ளார்.” என கூறுகிறார். 

உண்மையில் நிச்சியதார்த்தத்தின் பின்பு மரியாள் கர்ப்பவதியாயிருப்பதை யோசேப்பு அறிந்திருப்பான். மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதல்ல என்பதனாலேயே அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (1:19) இச்சமயத்திலேயே, “மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்தாவியினால் உண்டானது“ என தேவதூதனால் அவனுக்கு அறிவிக்கப்பட்டது. (1:20) மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள். அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் யோசேப்பு அவளை அறியாதிருந்தான். (1:25) எனினும் அவர்கள் நிச்சியதார்த்தம் செய்துகொண்டிருந்தமையால், அக்கால கலாச்சாரத்தின்படி கணவன்-மனைவியாக இருவரும் சமுதாயத்தினால் கருதப்பட்டமையே உறவு முறைப்பற்றி இரண்டுவிதமாக மத்தேயு எழுத காரணம் என்பதில் சந்தேகமுமில்லை.

மத்தேயுவினுடைய குறிப்பில் இயேசு யோசேப்பின் குமாரன் இல்லை என்பதற்கான இன்னுமொரு ஆதாரத்தை அவர் குறிப்பிட்டுள்ள வம்ச வரலாற்று அட்டவணையில் நாம் காணலாம். 42 பரம்பரைகளைக் கொண்ட இவ்வட்டவணையில் “பெற்றான்“ எனும் பதம் ஒவ்வொரு பரம்பரைக்கும் அதாவது ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்பதை சுட்டிக்காட்ட உபயோகிக்ப்பட்டதை அவதானித்திடலாம். ஆனால் இயேசுவைப் பற்றி குறிப்பிடும்போது மட்டும் யோசேப்பு அவரைப் பெற்றான் என கூறவில்லை. மாறாக, “மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகின்ற இயேசு பிறந்தார். (1:16) என எழுதியுள்ளார். யோசேப்பு இயேசுவினுடைய தகப்பன் அல்ல என்பதை கூட்டிக் காட்டவே, இவ்விடத்தில் மட்டும் “பெற்றான்“ எனும் பதம் உபாயோகிக்கப்படவில்லை. மரியாளை இயேசுவின் தாயாக காட்டும் மத்தேயு யோசேப்பை அவருடைய தகப்பனாக காட்டவில்லை. பிறப்பைப் பொறுத்தவரையில் இயேசுவுக்கும் யோசேப்புக்குமிடையில் எவ்விதமான சம்பந்தமுமில்லை. தேவகுமாரனாகிய அவர் மரியாளின் குழந்தை, யோசேப்பின் பிள்ளையல்ல அவர், அவருடைய மாம்சமும், இரத்தமும் மரியாளிடமிருந்து பெறப்பட்டதுயன்றி, யேசேப்புக்கு இதில் எவ்விதமான பங்குமில்லை. ஏனெனில் அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்தவர்

கன்னிப் பிறப்பை பற்றிய மத்தேயுவினுடைய குறிப்பில் எவ்விதமான முரண்பாடும் எத்தகைய தெளிவின்மையும் இல்லை என்பதை அறிந்து கொண்டாலும் இதை லூக்காவின் குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டும் ஒருசில இடங்களில் வித்தியாசப்படுவது போல தென்படுவதை அவதானிக்கலாம். எனினும் இவை இரண்டிற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மத்தேயு எழுதாமல் விட்டதை லூக்கா எழுதியுள்ளாதே தவிர, மத்தேயு எழுதியற்றை முரண்படுத்தும் விதத்திலோ அல்லது பொய்யாக்கும் விதத்திலோ அவர் எதையும் எழுதவில்லை. இயேசுவினுடைய பிறப்பில் யோசேப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தேயு எழுதுகையில் லூக்கா, மரியாளுடைய வரலாற்றை எழுதியுள்ளார். இரண்டையும் ஒன்றாக்கும்போது முழுமையான சத்தியத்தை அறிந்துகொளள்க் கூடியதாய் உள்ளது.

(வளரும்) 
பகுதி 3 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்

Friday, 9 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா?


இக்கட்டுரை
  • கன்னிப் பிறப்பின் அவசியம்
  • கன்னிப்பிறப்பிற்கான சாத்தியபாடுகள்  
  • மத்தேயுவினதும் லூக்காவினதும் வம்ச அட்டவணைகளில் காணப்படும் முரண்பாட்டிற்கான விளக்கங்களையும் அலசுகிறது 




கிறிஸ்தவ மார்க்கத்தின் மூலஉபதேசங்களில் மாம்சமாகிய இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பும் ஒன்றாகும். ஆதிச் சபையினது விசுவாசப் பிரமாணங்கள் அனைத்திலும் இவ்வுபதேசத்தைப் பற்றிய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கன்னிப்பிறப்பு உபதேசமானது கிறிஸ்தவ சபைகளில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. சபைப் பிதாக்களும் (Church Fathers) தங்கள் எழுத்தாக்கங்களில் இவ்வுபதேசத்தின் சத்தியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வந்தனர். கன்னிப் பெண்ணான மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்து, பாவமற்ற தெய்வீகக் குழந்தையாக இயேசு பிறந்தார் என்பதை மறுத்துரைக்கவோ, எதி்ர்த்துப் பேசவோ எவரும் துணியவில்லை. இவ்வுபதேசத்திற்கு முரணமாக பேசுவது , பரிசுத்தாவியானவருக்கு விரோதமான பாவமாகவும் கருதப்பட்டது. ஒருசில வேதப்புரட்டர்களும் இவ்வுபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமலிருந்தனர். 

இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் ப்றறிய தன்னுடைய 397 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலில் 43 பக்கங்களை 2ம் நூற்றாண்டில் இவ்வுதேசத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைப் பற்றி ஆராய்வதற்கு ஜே.ஜி. மெக்ஹேன் என்பார். இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் கிறிஸ்தவத்தின் முக்கிய நம்பிக்கையாக கன்னிப் பிறப்பு உபதேசம் சகல சபைகளினாலும் கருதப்பட்டது.  என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. தத்துவங்கள், கொள்கைகள் என்பவற்றின் அடிப்படையினாலன்றி சரித்திர பூர்வமான பாரம்பரியங்களின் அடிப்படையில், எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.“ என அறியத் தந்துள்ளார். மற்றைய உபதேசங்களைப் போலல்லாது. கன்னிப்பிறப்பு உபதேசமானது அதிக சர்ச்சைகள் இன்றி கி.பி. 381 ல் நெறிப்படுத்தப்பட்ட நைசீய விசுவாசப் பிரமாணத்திலும் (Nicene Creed) கி.பி. 390 இன் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்திலும் (Apostle's Creed) கி.பி. 451 இல் சால்சிடோன் விசுவாசப் பிரமாணத்திலும் (Chacedon Creed) திருச்சபையின் பொதுவான நம்பிக்கைகளுள் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, இன்றுவரை திருச்சபையால் உபயோகிக்கப்பட்டும் வருகிறது. 1909 இற்கும் 1915 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்படட மூலஉபதேசங்கள் (Fundamentals), “உண்மையான திருச்சபையின் நம்பிக்கைகளுள் கன்னிப்பிறப்பு உபதேசமும் இருக்க வேண்டும்“ என வலியுறுத்தியது. 

இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பானது, ஆதிகாலமுதலே திருச்சபையால் ஏகமானதாக எற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும், அண்மைக்காலங்களில், இவ்வுபதேசத்தை முழுமையாகவும், சொல்லத்தத்தினடிப்படையிலும் (literally) நம்பாதவர்களாகவே அநேக இறையியலாளர்கள் (Theologians) இருக்கின்றனர். என்பதை அவர்களது கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன. கன்னிப்பெண் கர்ப்பிணியாக இருக்க முடியாது என வாதிடும் அறிவியலாளர்கள் (Intellectuals) இயேசுகிறிஸ்துவின் பிறப்பிலுள்ள இயற்கைக்கும் அப்பாற்பட்ட “அற்புத தன்மையை“ ஏற்க மறுப்பவர்களாக,, இவ்வுபதேசம் கற்பனைக் கதையை அடிப்படையாகக் கொண்டது எனும் முடிவிற்கு வந்துவிட்டனர். சிலர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளையே இயேசு என எண்ணுகின்றனர். அநேக கிறிஸ்தவர்கள், உருவக மொழியின் (Figure of Speech) அடிப்படையிலேயே இவ்வுபதேசத்தை விளக்க வேண்டும் என வாதிடுகின்றனர். 

விஞ்ஞான யுகத்தில் வாழும் மனிதனுடைய அறிவு அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளமையால். எதற்கும் காரணகாரியங்ளைக் கண்டறிந்து, தனது அறிவுக்கு ஏற்புடையதாய் இரு்பபவைகள் மட்டுமே உண்மை, மற்றையவை அனைத்து் கற்பனைக் கதைகள், மூடக்கொள்கைகள் எனும் முடிவுக்கு மனிதன் வந்துவிட்டமையே, கன்னிப்பிறப்பு உபதேசத்தை நம்பாமல் இருப்பதற்கான காரணமாகும். உண்மையில் இவவுதேசம் மானிட அறிவுக்கு முரணாகவும் எதிராகவுமே உள்ளது. காரண காரியங்களின் அடிப்படையிலோ அல்லது ஆராய்ச்சி பரிசோதனை என்பவைகளின் முடிவின்படியோ விளங்கிக்கொள்ளக்கூடிய உபதேசமல்ல. இது மாறாக, பொய்யுரையாத தேவனுடைய (தீத். 1:3) ஆவியினால் அருளப்பட்ட தேவவார்த்தைகளை (2 தீமோ. 3:16) விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய சத்தியமாகும். எனினும் இவ்வுபதேசதம் புராணக்கதையல்ல. இயேசுவின் கன்னிப்பிறப்பு நம்புவது அறிவீனமான செயல் அல்ல. ஏனெனில் இது பின்தங்கிய மூடக்கொள்கைகளுடைய விஞ்ஞான அறிவற்ற காலத்து மனிதனுடைய கற்பனையல்ல. மாறாக மானிட சரித்தரத்தில், குறி்ப்பிட்ட காலத்தில் நடைபெற்ற மனிதனுடைய அறிவுக்கு எட்டாத உண்மைச் சம்பவமாகும். 

(அ) உபதேசத்தின் அர்த்தம்

கன்னிப்பிறப்பு உபதேசம் அநேகரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு போதனையாக, சில சமயங்களில் பிழையாக விளங்கிக் கொள்ளும் போதனையாக இருப்பதற்குக் காரணம், இதன் அர்த்தம் சரியான விதத்தில் வரையறுக்கப்படாமலிருப்பதேயாகும். கன்னிப்பிறப்பு எனும்போது, இயேசு பிறப்பு ஏதோ அசாதாரணமானதும், அசாத்தியமானதுமான முறையிலான பிறப்பு என அநேகர் எண்ணிக் குழம்புகின்றனர். உண்மையில், இயேசு பிறந்த விதம் அற்பதமானது என்பது இவ்வுபதேசத்தின் அர்த்தமல்ல. மறைந்த இறையிலாளர் ஜோன் மரே(John Murry) குறிப்பிட்டது போல, கன்னிப்பிறப்பொன்று கூறும்போது, மரியாளின் வயிற்றிலிருந்து குழந்தை வெளிவந்த விதம் அற்புதமானது என்றோ அல்லது மரியாளின் கருவறையில் குழந்தை வளர்ச்சியடைந்த முறை இயற்கைக்கும் அப்பாற்பட்டது, அசாதாரணமானது நாம் கருதுவதில்லை. ஏனெனில் மரியாள் குறிப்பிட்ட காலம்வரை குழந்தை இயேசுவை தன் வயிற்றில் சுமந்தாள். இயற்கையான முறையிலேயே அவளுக்கு பிரசவமும் ஏற்பட்டது.

கன்னிப்பிறப்பு உபதேசமானது, கன்னிப் பெண்ணான மரியாள் இயேசுவைக் கருத்தரித்த முறையே அசாதாரணமானது; இயற்கைக்கும் அப்பாற்பட்டது; அற்பதமானது என்று போதிக்கின்றது. ஜோன் மரே(John Murry) சுட்டிக்காட்டியது போல், “ஆண்விந்து மூலமாக மரியாள் கருத்தரிக்கவி்லை. மானிட தகப்பன் இன்றியே அவள் தாயானாள். இது சாதாரண இனவிருத்தி முறைக்கு முரணானது மட்டுமல்ல. சாத்தியமற்றதும் கூட. இதுவே அற்புதமான செயல். இதையே கன்னிப்பிறப்பு உபதேசம் (Doctrine Virgin Birth) வலியுறுத்துகிறது, மத்தேயு இதைப் பற்றி எழுதும்போது “இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.(1:18) என்று குறிப்பிட்டுள்ளார். 

பெண் கருத்தரிக்க வேண்டுமாயின், ஆணுடன் பாலியலுறவு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். இல்லாவிட்டால் இது நடைபெறாத காரியம் என்பதை அறிந்திருந்த மரியாள, தேவதூதனிடம்  “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே“ எனக் கேட்டதற்கு தூதன், பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்;... தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக் 1:30-37) என்றான். மானிட தகப்பினின்றியே “கன்னிப் பெண்ணான மரியாள் (லூக். 1:27) கர்ப்பவதியானதே இவ்வுபதேசம் கற்பிக்கும் சத்தியமாகும். எனினும் ஜோன் ஸ்டொட் சுட்டிக்காட்டியதுபோல, “பரிசத்தவியினால் கர்ப்பந்தரித்த இயேசு பிறக்கையிலும், மரியாள் கன்னிப்பெண்ணாகவே இருந்தாள்“ என்பதையும் நாம் மறந்துவிடக்கூ்டாது. மத்தேயுவும் கூட “மரியாள்  தன் முதற்பேறான குமாரனைப் அவளுக்கு கணவனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பு  அவளை அறியாதிருந்தான். (1:25) என இதை உறுதிப்படுத்துகிறார். (அறிதல் என்னும் பதத்திற்கு ஆதி 4:1 ஐ பார்க்கவும்)


(ஆ) உபதேசத்தின் ஆதாரம் 

கன்னிப்பிறப்பு உபதேசத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்ட நாம், அதற்கான ஆதாரங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை மறுப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் தகுந்த பதில்களைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். மட்டுமல்ல இவ்வுபதேசத்தைப் பற்றி போதிய அறிவற்றவர்களுக்கும் ஏற்ற விளக்கங்களையும் கொடுக்க முடியும். எனினும் இவ்வுபதேசத்தைப் பற்றி இந்த அளவுக்கு விபரமான ஆதார விளக்கங்கள் எதற்கு, இயேசு கன்னி மரியாளிடத்தில் பிறந்தார் என்று அறிந்திருந்தால் போதும் சில சமயம் நாம் எண்ணலாம். ஆனால் பேதுருவின் கட்டளை இத்தகைய பரந்த அறிவு தேவையென்றே கூறுகிறது,  “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15) என நாம் அறிவுறுத்தப்பட்டுள்ளமையால் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பற்றி நம்மிடம் விசாரிப்பவர்கள் இச்சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் கொடுக்க நாம் தயாரியிருக்க வேண்டும். எனவே, இவ்வுபதேங்களுக்கான ஆதாரங்களை விபரமாக ஆராய்ந்து பார்ப்போம். (எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன என்பதை கருத்திற் கொண்டு வாசிக்கவும்)
(வளரும்)
பகுதி 2 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்

(இவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் எழுதிய கன்னிப்பிறப்பு கற்பனையா? - “சத்தியவசனம்” கார்த்திகை-மார்கழி 88, தை-மாசி 89 இதழிலிருந்து பெறப்பட்டதாகும்)

Monday, 27 December 2010

கிறிஸ்மஸ் புறஜாதியாருடைய பண்டிகை நாளா?

புறஜாதியாருடைய பண்டிகை நாளான டிசம்பர் 25ம் திகதியையே கொன்ஸ்டன்டைன் கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கினான். பல கிறிஸ்தவர்களும் புறமத தெய்வத்தின் பண்டிகை நாளே கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், இது தவறான கருத்தாகும். உண்மையில் கிறிஸ்தவர்களின் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டே புறஜாதி மக்கள் தங்களுடைய பண்டிகையை டிசம்பர் 25ம் திகதி கொண்டாடியுள்ளனர். எனவே. டிசம்பர் 25ம் திகதி பண்டிகை புறமதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு வந்த கொண்டாட்டம் அல்ல.

புறமதப் பண்டிகையின் நாளே கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றப்பட்டது என்னும் கருத்து முதற்தடவையாக கி.பி. 17ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே உருவானது. (1) ஆனால் கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவம் முழுமையாக யூதமாரக்கத்திலிருந்து பிரிந்து தனியான ஒரு மதமாகியது. அதன்பின்னர் இயேசுக்கிறிஸ்துவின் மரணம் சம்பவித்த நாளைக் கிறிஸ்தவர்கள் கணிப்பிடத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வித்தியாசமான கலண்டர்கள் உபயோகத்தில் இருந்தமையால், கிழகத்திய சபைகள் ஏப்ரல் 6ம் திகதியையும் மேற்க்கத்திய சபைகள் மார்ச் 25ம் திகதியையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளாகக் கணித்தனர். பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகள், தாங்கள் கருவுற்ற அல்லது பிறந்த தினத்திலேயே மரித்தார்கள் என்னும் நம்பிக்கையின்படி இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கத்திய சபைகளில் இயேசு கிறிஸ்து ஜனவரி 6ம் திகதி பிறந்தார் என்றும் மேற்கத்திய சபைகளில் அவர் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றும் முடிவு செய்யப்பட்டது. (2). எனவே, கிறிஸ்மஸ் பண்டிகையின் நாள், புறமதப் பண்டிகை நாளின் கிறிஸ்தவ மாற்றம் அல்ல.

கொன்டஸ்டன்டைன் என்னும் அரசன் டிசம்பர“ 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடியதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. உண்மையில் இவ்வரசனுடைய மரணத்திற்கும் (கி.பி. 337) பின்பே. அதாவது கி.பி 379ம் ஆண்டே முதற்தடவையாக இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூரும் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்பட்டது. எனவே, கொன்ஸ்டன்டைன் என்னும் அரசனே புறமதப் பண்டிகை நாளைக் கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றினான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

(இவ்வாக்கமானது சகோ. எம்.எஸ் வசந்தகுமார் அவர்கள் எழுதிய டாசின்சியின் ஓவியத்தைப் பற்றிய நாவல் உண்மைச் சரித்தையா? என்னும் நூலிலிருந்து பெறப்பட்ட்தாகும்)
பின்குறிப்பு :- இத்தலைப்புக்கு ஏற்றவித்த்தில் மூலகருத்திற்கு எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் சிலவற்றை Edit செய்துள்ளேன்)

References :
(1) W.J. Tighe, : “Calculating Christmas’ in Touchstone, December 2003
(2) C.E. Olson & S. Miesel, The Da Vinci Hoax : Exposing the Errors in Da Vinci Code p, 162-163

Friday, 17 December 2010

பாடல்!

சாயங்கால நேரம். ஜாரி தான் காலையிலிருந்து கஷ்டப்பட்டு செய்த அந்த அழகான கிறிஸ்துமஸ் தொழுவத்திற்கு முடிவு வடிவத்தை செய்து கொண்டிருந்தான். 

திடீரென்று எங்கிருந்தோ ஒரு சுண்டெலி பாய்ந்து வந்து தொழுவத்தின் கூரையில் போய் ஒரு துளையை தோண்டியவாறு நின்றது.

மிகவும் கோபமடைந்த ஜாரி, ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்துக்கொண்டு , அந்த சுண்டெலியை அடித்து நொறுக்க கட்டையை ஓங்கினான். அந்த வேளையில் அங்கு வந்த போதகர் பீட்டர் பெர்ணான்டஸ், ஜாரியின் தோளின் மேல் கையை வைத்து தடுத்தவராக அவனுக்கு ஒரு சிறுகதையை சொன்னார்.

""""ஓபன்டார்ஃப்"" என்று ஆஸ்திரியா நாட்டில் புனித நிக்கோலஸ் என்னும் ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. 1818- ஆம் ஆண்டு, போதகர் யோசேப்பு மேஹர், நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனைக்காக பாடல் குழுவினரை தயார் செய்துகொண்டிருந்தார். ஆனால், இந்த நேரத்தில்தான், ஆலயத்திலுள்ள இசைக்கருவி, சத்தமே எழுப்பாமல், அமைதியையே வெளியிட்டது.

உடனடியாக ஏதோ ஒன்று செய்தாக வேண்டுமே என்று அவர் எண்ணியபோது, போதகர் மேஹருக்கு, பெத்லஹேமில் அன்று இரவு பிறந்த குழந்தை இயேசுவின் ஞாபகம் வந்தது. பாதிரியின் ஆன்மாவிலிருந்து ஒரு பாட்டு தோன்றியது. எந்தவித இசைக்கருவியுமின்றி, இன்றியமையாத ஒரு பாடலை உருவாக்கினார் பாதிரி மேஹர். அந்த பாட்டைத்தான் இன்றும் உலகெங்கிலும் உள்ள எல்லா கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்துமஸ் இரவில் பாடுகிறோம். அதுதான் "சைலன்ட் நைட்" என்ற பாடல் . ""இத்தனை மகத்துவமான பாட்டிற்கு காரணம் யார் தெரியுமா?"" 

"அதோ அந்த எலிக்கூட்டத்தை சேர்ந்த ஒரு சுண்டெலிதான். கிறிஸ்துமஸ்ஸூக்கு சில நாட்களுக்குமுன் ஒரு சுண்டெலி ஆலயத்திற்குள் புகுந்து அந்த இசைக்கருவியின் காற்றழுத்த இடத்தில் ஒரு துளை போட்டுவிட்டது. ஆகவே தான் இசைக்கருவியில் நிசப்தம் உருவானது, இந்த மகத்துவமான பாடலும் உருவாக வழிவகுக்கப்பட்டது. ""

தொடர்ந்தார் போதகர், "நாமும் அந்த உபபோயகமற்ற எலியைப்போல்தான் இருந்தோம். இயேசு நம்மைதான் தம்மைபோல் மாற்றும்பொருட்டு, நம்மீது இரக்கம்கொண்டு நமக்காக ஒரு மனிதனாக பிறந்தார் .""